ஏன் ரோஜா உனக்கு இந்த விஷ பரீட்சை? லவ்வை சொல்றதுன்னா சொல்லிடலாம்ல...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா ஆசை ஆசையா அர்ஜுனிடம் தன் காதலை சொல்ல கோயிலுக்கு அழைச்சுட்டு போறா.
கார் சாவியை ஒளிச்சு வச்சுட்டு, வண்டியில அவனை கட்டிக்கிட்டு போக ஆசைப்பட்டு, அது படியே வண்டியில போலாம் சார்னு சொல்லி பைக்ல போறா.
ஸ்பீட் பிரேக் வந்தா இதுதான் சாக்குன்னு அர்ஜுனை கட்டிப் பிடிச்சுக்கறா. பிறகு வேணும்னே அர்ஜுன் ஸ்பீட் பிரேக் மேலே ஏறாம ஒதுங்கி
வண்டியை ஓட்டறான்.
சந்திரகுமாரி நேரத்துல தமிழ் செல்வியா? அப்போ சந்திரகுமாரி கதி...?
மனுஷனுக்கு ரசனை இல்லை
கொஞ்சம் கூட ரசனை இல்லாத மனுஷன்னு முணு முணுக்கறா. என்ன ரோஜா சொன்னேன்னு கேட்க, ஒண்ணுமில்லை நீங்க சூப்பரா வண்டி ஓட்டறீங்க சார்னு சொல்றா.
குங்குமமும் விபூதியும்,
அர்ஜூன்கிட்ட லவ்வை சொல்லிடணும்னு அம்மன்கிட்ட உத்தரவு கேட்க விபூதியும், குங்குமமும் மடிச்சு தர சொல்றா. அவனும் ரெண்டு பொட்டலங்களை எடுத்து வர, அம்மனிடம் வேண்டிக்கிட்டு அர்ஜுனை ஒரு பொட்டலத்தை எடுக்கச் சொல்றா... குங்குமம் வரணும்னு வேண்டிருக்கிட்டு.
உன் பிரச்சனை
ஆனா, விபூதி வருது... என்ன அம்மா இப்படி ஏமாத்திட்டே..என்னை நீதானே வழி நடத்தணும்னு சொல்லிட்டு அழறா. இப்போ என்ன ரோஜா உன் பிரச்சனைன்னு அர்ஜுன் கேட்க..சார் ஒரு முக்கியமான விஷயத்துக்காக குங்குமம் வரணும்னு வேண்டிகிட்டேன்.விபூதி வந்திருக்கு சார்னு அழறா.
ரெண்டிலும் விபூதி
இதுதானா உன் பிரச்சனை.. அதை பிரிச்சுப் பாருன்னு சொல்றான் அர்ஜுன். பிரிச்சுப் பார்த்தா அதிலும் விபூதிதான் இருக்கு. நான் ரெண்டிலும் விபூதிதான் வச்சேன்.எப்படி குங்குமம் இருக்கும்னு கேட்கறான் அர்ஜுன்.
உங்களை அப்படின்னு துரத்த..அவன் ஓட கோயிலில் ஓடிப் பிடிச்சு விளையாடறாங்க.