Sundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே?
சென்னை: தூக்கத்தில் நடக்கற வியாதி கேள்விப்பட்டு இருக்கோம்.. இது தூக்கத்தில் உருளும் வியாதியாமே...! என்னடா கிளப்பறீங்க பீதியை.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஒரு காட்சிதான் இது. ரொம்ப காமெடியா இருக்குப்பா.
பொண்டாட்டி தமிழ் பக்கமா வேலு உருண்டு படுக்கும்போது, தமிழ் முழிச்சுக்கறா. அப்போதுதான் வேலு இப்படி சொல்றான். எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு.
சீரியல் ஃபார்முலா
விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று ஒரே ஃபார்முலா ஒண்ணு இருக்குது. அதாவது, கல்யாணம் ஆகிரும்.. ஆனா சேர்ந்து வாழ மாட்டாங்க.முதலில் எதிரும் புதிருமான வாழ்வாங்க. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சாஃப்ட் கார்னர் வரும். அப்புறம் லவ் வரும்.
sembaruthi serial: இப்படியே போனா ஆயுசுக்கும் சீரியல் எடுக்கலாம்ங்க!
காதலை சொல்லாமலே
அந்த காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்காமலே வாழ்வாங்க. அவ்வப்போது சொல்லிக்கற மாதிரி சூழ்நிலை வரும். அதையும் கடந்து கடந்து சீரியல் ஆர்வலர்களை ஒரு எதிர்பார்ப்பிலேயே வச்சு எபிசோடை நகர்த்திக்கிட்டே போவாங்க பாருங்க.. படு சாமர்த்தியம்! இதுதான் விஜய் டிவி முக்கால்வாசி சீரியல்களின் கதை.
வேலு தமிழ்
தமிழும் வேலுவும் அப்படித்தான் கல்யாணம் ஆகியும் ஒன்னு சேராம வாழ்கிறார்கள். பொண்டாட்டி தமிழ் மேல் இருந்த கோவம் வேலுவுக்கு மாறிப் போகுது. அப்போதுதான் படுக்கையில் தமிழ் பக்கமா வேலு உருண்டுகிட்டு வர்றான்.
விருட்டென்று எழுந்து
கையை தமிழ் மேலே போடலாம்னு கையைத் தூக்க, விருட்டென்று எழுந்து உட்கார்ந்து விடுகிறாள் தமிழ். உடனே கண்ணை முட்டிகிட்டு தூங்குவது போல பாவ்லா செய்யும் வேலு, கண் முழிச்சு.. என்ன தமிழ் தூங்கலியான்னு கேட்கிறான். ஐயோ நான் எப்படி உன் கிட்டேன்னு பதறுகிறான்.