Run Serial: ஹையா...திவ்யாவும் சக்தியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் டெக்னிக்கல் ரீதியா கொஞ்சம் புதுமையான சீரியல்தான்.. உண்மையில் இயக்குநருக்கு எப்படி அதிகம் வேலை இருக்கிறதோ, அதே மாதிரி எடிட்டருக்கும் அதிகம் வேலை இருக்கிறது இந்த சீரியலில்.
சில சமயம் ஒரு லொக்கேஷனுக்கு ஒரு சீன் என்று கூட கதை நகர்கிறது. ஒரு சில வசனங்களைப்பேச ஒரு லொக்கேஷன் என்று கூட மெனெக்கெட்டு இருக்கிறார்கள்.
இந்த மாற்றம் புதுமை, வரவேற்கத் தக்கது.பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எந்த வேலையானாலும் தனித்திறமை என்று ஒன்றை காண்பிக்க ஆரம்பித்தால்தான் அங்கே நாம் தொடர்ந்து நிற்க முடியும்.
அப்பா கெட்டவரா
திவ்யாவின் அப்பா டாக்டர் ஆர்.கே.முதலில் காணாமல் போய் அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட , அடுத்த நிமிஷத்தில் இருந்து பலப்பல மர்மங்கள் தலை எடுக்கிறது. ஆஸ்பத்திரியை திவ்யா தனது பொறுப்பில் எடுத்துக்க, ஆஸ்பத்திரியில் போதை மருந்து கடத்தினார் உங்க அப்பா. அது இன்னும் அங்கு இருக்கிறது. எங்களுக்கு சரக்கு வந்தாக வேண்டும் என்று திவ்யாவை சித்தப்பாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.
சித்தப்பா தெரியவில்லை
திவ்யாவின் சித்தப்பா ரொம்ப நல்லவர் என்று வீட்டார் நினைக்க, இவர்தான், சகலை ஆர்,கேயின் ஆஸ்பத்திரில தனது ஆட்களை வச்சு, ஆர்.கேவுக்கு தெரியாமல் போதை மருந்து கடத்தி இருக்கிறார் என்று திவ்யாவுக்கு தெரியவில்லை. மறுபடி மறுபடி சித்தப்பாவிடம் சென்று பண உதவி கேட்டாலும்,போதை மாத்திரை சரக்கை கேட்டு மிரட்டும் ருத்ரன் பற்றி பேச முடியவில்லை.
கேரோலின் கெட்டவளா
கேரோலினுக்கும், டாக்டர் ஆர்.கேவுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.அது எந் தவகையில் என்று சக்தியும் சேர்ந்து திவ்யாவை டார்ச்சர் செய்கிறான். கடைசியில் கேரோலின் வீட்டுக்கும் போயி அந்த சரக்கு இருக்கிறதா என்று பார்த்து விடலாம் என்று போகும்போதுதான் அங்கு காலியான அந்த போதை மாத்திரை அட்டை கிடைக்கிறது.
நன்றாக இருக்கும்
கேரோலின் வீடு வரைக்கும் திவ்யா வந்துவிட்டாள் என்று அறிந்த சக்தி, இதைக் கேட்டு திவ்யாவை மிரட்டுகையில்தான், அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறான் சக்தி.உண்மையை சொல்லு...நீ ஏதோ பிரச்சனையில் மாட்டிகிட்டு இருக்கே.நான் உனக்கு உதவி செய்யறேன்னு சொல்லி சக்தி கேட்கிறான். இனி இருவரும் சேர்ந்து உண்மையை தேடப் போகிறார்கள்.
இனி ஓட்டம் நன்றாக இருக்கும்.