Run Serial: குருவி தலையில இம்மாம் பெரிய பனங்காயை வச்சு....!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். சீரியலின் படப்பிடிப்பே வித்தியாசமாக இருக்கிறது. மாறுபட்ட லொக்கேஷன்களில் ஷூட்டிங், காமிரா கோணங்கள் என்று அசத்தி இருக்கிறார்கள்.
இதுக்கவே நிறைய சினிமா டெக்னீஷியன்கள், டிவிக்கு சீரியல் எடுக்கும் டெக்னீஷியன்ங்கள், இந்த துறைக்கு படிக்கும் பிள்ளைகள் இந்த சீரியலை வாட்ச் பண்ண ஆரம்பித்து இருக்கிறார்கள்.
உண்மையில் டிவிக்களுக்கு தொடர் எடுப்பவர்கள்.இந்த சீரியலை தொடந்து பார்த்து வந்தால், கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது.
உறவுக்குள் துரோகம்
உறவுக்குள் துரோகிகள் இருந்தாலே, அந்த குடும்பம் சின்னா பின்னமாகி விடும். அதுவும் பணக்கார உறவுக்குள் பணக்கார உறவுகளே அவர்களின் தொழிலுக்கு துரோகம் செய்தால் குடும்பமே பாழாகிவிடும்.எப்படி நினைத்தாலும், குடும்பத்தை பழைய நிலைமைக்கு மீட்டு எடுப்பது என்பது இயலாத காரியம்.
சகலை டாக்டர் ஆர்.கே
டாக்டர் ஆர்கேவும், சகலையும் ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள். ஆனால், சகலையின் மனைவி இறந்துவிட மனிதர் பெண் குழந்தைகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பிவிட்டு தனியாகவே வாழ்ந்து வருகிறார்.இவரை ஆர்.கே நம்பியதால் அதை சாதகமாக்கிக்கொண்டு வெளிநாட்டு போதை மருந்து கடத்துபவர்களுடன் சேர்ந்து அதற்கு பாதுகாப்பு கவசமாக சகலையின் ஆஸ்பத்திரியை பயன்படுத்திக்கறார்.
Kalyana Veedu Serial: கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை இல்லேன்னு கவலையா?
டாக்டர் ஆர்.கே செத்தாச்சு
ஆர்.கே ஒரு கட்டத்தில் திவ்யாவிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாக சகலை சொல்ல, சகலை அப்படி ஒப்படைத்தால் உன் பெண்ணை வச்சுக்கிட்டு,ஆஸ்பத்திரியை எங்கள் கடத்தல் தொழிலுக்கு பயன்டுத்திக்க முடியாது. ஆஸ்பத்திரியை கவனிக்கும் பொறுப்பை என்கிட்டே விட்டுடுன்னு சகலை மிரட்டி கேட்கிறார்.
சத்தியமா மாட்டேன்
சாத்தியமா உன்னை என் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்க மாட்டேன்.திவ்யாதான் பார்த்துக்குவான்னு ஆர்.கே.அடம் பிடிக்க கல்குவாரில் வச்சு அவரை கொன்னுடறார். இந்த பிசினெஸை தொடர முடியாமல் திவ்யா தடையாக இருப்பதால், அவளுக்கு பல தொல்லைகளை கொடுத்து மிரட்டறாங்க போதைப் பொருள் கடத்தும் கும்பல்..
திவ்யாவின் சித்தப்பாவின் ஆள் ருத்ரன் திவ்யாவை ஓட ஓட வீட்டிலிருப்பவர்களின் ஒவ்வொருத்தர் மீதும் உயிர் போகும் படி பயமுறுத்தி, திவ்யாவை ஆஸ்பத்திரில் மாட்டி இருக்கும் போதைப் பொருளை எடுத்து வர சொல்கிறான்.
சீரியலின் கதையும் படப்பிடிப்பும் நல்லாவே இருக்கு.