Run Serial: குற்றம் நடந்தது என்ன? சேர்ந்து கண்டுபிடிக்க போறாங்க!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் ஆரம்பமே கொஞ்சம் பரபரப்புதான். எடுத்த எடுப்பில் சக்தியின் காதலி கேரோலின் காணாமல் போவதும், அடுத்து திவ்யாவின் அப்பா டாக்டர் காணாமல் போவதும் என்று.
கேரோலின் காணாமல் போன அடுத்த நாள் கடற்கரையில் பிணமாக கிடைக்க, அதற்கு அடுத்த நாளில் டாக்டர் ஆர்.கேவும் கல் குவாரியில் பிணமாக கிடைக்கிறார்.
அப்பாவின் சார்பாக திவ்யாவும், கேரோலின் சார்பாக காதலன் சக்தியும் இருவரின் இழப்பை தாங்கிக்க முடியாமல் அல்லாடினாலும், இருவருக்குமே காரணம் என்ன என்று தெரிய வேண்டும்.
சக்தி திவ்யா
திவ்யா ஹாங்காங்கில் படிச்சுட்டு வந்ததுமே சக்தியுடன் பிரச்சனை துவங்கி விட்டது. அதாவது திவ்யாவின் அப்பா ஆர்.கே. அவளுக்கு பரிசாக கொடுத்த ஆடி காருக்கு டியூ கட்டவில்லை என்று காரை சீஸ் செய்கிறான் சக்தி. இதில் இருவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது என்றாலும், அடுத்தடுத்து இருவரின் சொந்த பிரச்சனை காரணமாக அடிக்கடி சந்திக்க நேர்கிறது.
Azhagu Serial: குழந்தை கடத்தலை பெரிய விஷயமாக்கி காமிப்பீங்களா?
ஒரே பிரச்சனை
சக்தி கண்டுபிடித்து விட்டான்..தனது காதலி கேரோலினை கொன்றது ஆர்.கே தான் என்று.ஆனால்,ஆர்.கே வும் இரண்டு நாளில் இறந்துவிட இப்போது ஆர்.கே.இறந்தது எதனால். இவருக்கும் கேரோலினுக்கும் எந்த வகையில் தொடர்பு என்று சக்தி ஆராய நினைக்கிறான். இதனால், அடிக்கடி திவ்யாவுக்கு தொல்லை கொடுக்க பொறுத்துக்க முடியாத திவ்யா போலீசில் புகார் கொடுக்கிறாள்.
ஆஸ்பத்திரி தப்பிச்சது
ஆஸ்பத்திரி தவிர வீட்டின் மீது கடன். சொத்து பத்திரத்தை வைத்து கடன் என்று, ஆர்.கே.பல வகையிலும் கடன் வாங்கி வைத்திருக்கிறார். இதனால், குடும்பமே திகைத்து நிற்கிறது. ஆஸ்பத்திரியை விற்றால் மட்டுமே பிரச்சனையில் இருந்து மீளமுடியும் என்கிற நிலையிலும், அப்பா கனவில் உருவான ஆஸ்பத்திரியை விற்க கூடாது என்று கூறுகிறாள் திவ்யா.
ஸ்ட்ரைக் ஊழியர்கள்
ஆஸ்பத்திரியில் பல மாதங்களாக சம்பள பாக்கி என்று ஊழியர்கள் பேசியதைக் கேட்ட சக்தி, அவர்களை ஸ்ட்ரைக் செய்ய தூண்டி விடறான். இதுவரை திவ்யாவுக்கு தெரியவில்லை, சக்தி ஏன் நம்ம விஷயத்தில் அடிக்கடி குறுக்கே வருகிறான் என்று. இருவருக்குமே எதிரி திவ்யாவின் சித்தப்பாதான் என்று இருவருக்கும் தெரிந்து இருவரும் சேர்ந்து ஓடும் ஓட்டமாக ரன் சீரியல் இருக்கும் போல!