Run serial: பிரச்சனை பூதம் மாதிரி கிளம்புதே...!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு. ரொம்ப ரிச்சாக சீரியலை ஷூட் செய்து இருப்பது வரவேற்புக்கு உரிய விஷயமாக சீரியலில் பார்க்கப்படுகிறது.
ஒரே மாதிரி கதைகள், வசனங்கள், கோப தாபங்கள் பழி வாங்கும் உணர்ச்சி என்று இல்லாமல் இது சற்றே மாறுபட்டு வேறு வகையில் அனைவரும் விரும்பும் படி ஒளிபரப்பாகிட்டு வருது.
ஆஸ்பத்திரியில் என்ன கொடுமைகள் நடக்க வாய்ப்பு இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்கும் வகையில் இந்த சீரியல் கதையின் போக்கு இருக்கிறது.
Azhagu serial: அரை வட்ட நிலா மச்சம்..நல்லாருக்கே!
அப்பா திவ்யா
திவ்யாவை ஆஸ்பிடல் அட்மினை கவனிக்கும் அளவுக்கு படிக்க வச்ச நிலையில், டாக்டர் ஆர்.கே அதாவது , திவ்யாவின் அப்பா காணாமல் போயி இறந்து விடுவது வரை சீரியல் மர்மமாகவே ஒளிபரப்பாகிட்டு இருந்தது. கதை பிடிபடவே பல எபிசோட் ஆனது என்றாலும், சீரியல் பாணியிலிருந்து சற்றே விலகி மாறுபட்ட கதை இருப்பதால், சலிப்பு தட்டவில்லை.
ஆஸ்பத்திரியில் போதை
ஆஸ்பத்திரியில் போதை மருந்து கடத்தல் நடந்தால் எவ்வளவு பாதுகாப்பு என்பதை மக்கள் அறியும் விதமாக கதையில் காட்டுவது எளிமை என்றாலும், இதை பார்த்து சாதாரணமா ஆஸ்பத்திரி நடத்துபவர்கள் கூட இதை செய்யலாம் போல என்கிற எண்ணம் வராமல் இருக்க வேண்டும் என்பது சமூக அக்கறை.
ரகசியம் இல்லாமல்
குடும்பத்தில் மூத்தவர் அல்லது குடும்ப தலைவன் இருந்தால் அவர் என்ன செய்கிறார்... தனக்கு பிறகு யார் பொறுப்பேற்க வேண்டும்..அப்படி பொறுப்பு ஏற்கும்போது சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை சொல்லிவிட வேண்டும். குடும்பத்தில் ரகசியம் காக்க கூடாது என்பதை உணர்த்தும்படி கதை நகர்கிறது.
திவ்யா மாட்டிக்கிட்டா
ஆஸ்பத்திரியில் நாங்களும் அப்பாவுடன் சேர்ந்து போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு இருந்தோம். இப்போதும் உன் ஆஸ்பத்திரியில் இதே போல மாத்திரைகள் இருக்குது.அதை கண்டுபிடிச்சு எடுத்து குடுத்துடு. இல்லை உங்க வீட்டில் எல்லாரையும் கொன்னு போட்டுடுவோம்னு மிரட்டல் வருது.
உனக்கு என்ன வேணும்
யாருடா நீ உனக்கு என்ன வேணும்னு அடிக்கடி திவ்யா டயலாக் பேசறாங்க.இதே டயலாக்கை பேசி வந்தவனை மிரட்ட, இப்போப்பாரு உன் வீட்டில் யார் யாரை என்ன செய்து இருக்கோம்னு காமிச்சு பயமுறுத்தறாங்க. இதோ பயத்தில் திவ்யாவும் ரேக்கைத் திறந்து போதை மாத்திரையை தேட ஆரம்பித்து இருக்கிறாளே!