மரங்களை வெட்ட கூடாது.. ஷீரடி சாய் அப்பவே அப்படி சொல்லி இருக்கார்...!
சென்னை: சன் டிவியின் ஷீரடி சாய் பாபா சீரியல் சாய் பக்தர்களுக்கு தினம் ஒரு விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதா இருக்கு.
ஷீரடி கிராமத்தில் சாயை கிண்டல் செய்ப்பவர்களும் இல்லாமல் இல்லை. அந்த ஊரில் மக்களின் உழைப்பை உறிஞ்சி குறைந்த சம்பளம் தருவதில் வல்லவர் குல்கர்னி
குல்கர்னி ஐயா அந்த ஊரின் செல்வந்தர். இவர் ஏழைகளுக்கு வட்டிக்கு பணம் குடுத்து ஒன்றுக்கு பத்தாக வசூலிப்பவர்.
கிணத்திலிருந்து அவ வெளியில வந்துட்டா.. வெள்ளை புடவை... விரித்து போட்ட தலை முடி...!
புலி
ஊருக்குள் புலி வந்துருது...இதற்கான காரணம் காட்டைச் சுற்றி இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு, தடுப்பு சுவர் கட்டாததுதான் என்று குல்கர்னி சொல்றார்.
சாய்
இதுக்காக வேலைக்கு ஆட்கள் எடுக்க கூட்டம் போடறார் குல்கர்னி. அரசாங்கத்தோட அனுமதிக்கு லெட்டர் போட்டு இருப்பதாகவும் சொல்றார்.
காரணமா
புலி ஊருக்குள் வந்து ஒரு அம்மாவை கடிச்சு இருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு பார்க்கணுமே தவிர, ஆங்கிலேய அரசாங்கத்துக்கு தெரியாம மரங்களை வெட்டி காட்டை அழிச்சுட கூடாதுன்னு சாய் சொல்றார்.
சாய் நாடோடி
ஏய் நாடோடி..நீ மூக்கை நுழைக்காதே.. எல்லாம் எனக்கு தெரியும். ஊருக்குள்ள புலி வந்து ஒரு அம்மாவை கடிச்சு இருக்கு. காட்டுல இருக்கும் மரங்களை வெட்டி அதுங்க உள்ளே வராம தடுப்பு சுவர் கட்டுவியா... வியாக்கியானம் பேசிகிட்டு இருக்கேன்னு கேட்கறார் குல்கர்னி.
நமக்குத்தான் ஆபத்து
புலி ஊருக்குள்ள வராம இருக்க என்ன செய்யணுமோ அதை நாம செய்துதான் ஆகணும். அதுக்காக காட்டுல இருக்கும் மரங்களை வெட்டித்தான் தடுப்பு சுவர் கட்டணும்னு இல்லைன்னு சாய் சொல்றாங்க.
அரசு சம்மதம்
ஆங்கிலேய அரசு இன்னும் சம்மதம் தாராமலே இருக்கு.அதுக்குள்ளே நீங்க வேலையை ஆரம்பிச்சது தப்புன்னு சாய் சொல்றாங்க. அரசு சம்மதம் தரும்னு எனக்கு தெரியும்னு சொல்லிட்டு மரங்களை வெட்ட ஆரம்பிக்கறாங்க.
சொல்லும் வழியை
சாய் சொல்லும் வழியை நாம் ஒரு முறை கேட்கலாமே என்னதான் சொல்றாருன்னு பார்க்கலாம்னு ஒரு கூலித் தொழிலாளி சொல்ல, எனக்குத் தெரியும்..நீ உன் வேலையைப்பாரு.. இல்லை இனி வேலை செய்ய வேணாம்னு சொல்லி அவரை தள்ளி விடறார்.அவர் சாயின் மேலே போய் விழறார்.
அரசாங்கம்
ஆங்கிலேய அரசாங்கம் சம்மதம் சொல்லி, தடுப்பு சுவர் கட்ட பணம் தந்தா அதுல பாதி பணத்தை நாம எடுத்துக்கலாம்னுதான் இந்த ஐடியா பண்ணினேன்னு சொல்றார் குல்கர்னி
பாருங்க அப்பவே இந்த மாதிரி பம்மாத்து வேலை எல்லாம் நடந்துக்கிட்டுத்தான் இருந்திருக்கு...