கல்யாணம்னா நாலு விஷயங்களில் ஃபியர் வருமாமே.. சாய் தன்ஷிகா...!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ப்ரோமோவில் நடிகை சாய் தன்ஷிகா கல்யாணம் வருங்கால கணவன் பற்றிய கருத்துக்களை கோபிநாத்துடன் பகிர்ந்துகொண்டு இருக்கார்.
எப்போதும் நீயா நானா ஷோ நடக்கையில் சிறப்பு எக்ஸ்பர்ட் வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வர்.
விஜய் டிவியின் ஒரு ஹிட் நிகழ்ச்சியான இதை இன்றளவும் நேரம் மாற்றினாலும் விடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது விஜய் டிவி.
சாய் தன்ஷிகா
வரும் வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு நடிகை சாய் தன்ஷிகா எக்ஸ்பர்ட் கருத்துக்களைக் கூற வந்து இருக்கார். அதன் ப்ரோமோ இப்போது வெளியாகி வருகிறது. அதில் கல்யாணம் என்றால் என்னென்ன பயம் வரும் பெண்களுக்கு என்று பொதுவாக பட்டியலிட்டு உள்ளார்.
விஷயம் நாலு
கல்யாணம்னா நாலு விஷயம் ஃபியரா இருக்கும் சார். முதலாவது தெரியாத ஒருத்தனோட வாழப் போற ஒரு விஷயம். அதுக்குப் பிறகு கல்லூரி படிச்சுக்கிட்டு இருப்போம், வேலை பார்த்துகிட்டு இருப்போம் இல்லை எதோ ஒன்னு..நாம ரொம்ப சுதந்திரமா யாரையும் டிபென்ட பண்ணாம இருப்போம்.
கணவனை டிபென்ட்
கல்யாணத்துக்குப் பிறகு அவனை டிபென்ட் பண்ணி இருக்க வேண்டுமோ...சுதந்திரமா இருக்க முடியாது என்கிற பயம். பையன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்கிற பயம்..இதெல்லாமிருக்கும் என்கிறார். நார்மலான குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த உங்களுக்கே அப்படி இருக்குதா? உங்களுக்கு எப்போ இவன்மாதிரி ஒருத்தனை கல்யாணம் செய்துக்கலாமென்று தோன்றி இருக்குன்னு கோபிநாத் கேட்கிறார்
|
எனக்கும் ஐடியல்
17 வயசில நான் சினிமாவுக்கு வந்தேன்.. பேராண்மை படத்தில் நடிக்கும் போது. அப்போ எனக்கு ஒரு நினைவும் இல்லை. ஒரு 20 அல்லது 22 வயசுல எல்லாம் எனக்கு அந்த தாட் வந்து இருக்கு. இண்டஸ்ட்ரியில இருக்கும் ஒரு சில பேரைப் பார்த்து நல்ல குவாலிட்டீஸோட இருக்கும்போது இந்த மாதிரி ஒரு பையன்தான் எனக்கு வேணும்னு தோன்றி இருக்கு. ஹெல்ப் பண்ற மைன்ட்.. நல்லஎண்ணமிருக்கறவரு. காசு பணம் எல்லாம் செகண்ட்ரிதான்..இப்படி இண்டஸ்ட்ரி பசங்களைப்பார்த்து தோன்றி இருக்கு.
ஆனால், அதை சொல்ல முடியாது சார்னு சொல்றாங்க. நான் அதை கேட்கலை... ஆனால், அதை ஏன் நீங்க புரசீட் பண்ணலை? அடுத்தக்கட்ட லெவலுக்கு எடுத்துப் போக நினைக்கலைன்னு கோபிநாத் கேட்கிறார். தன்ஷிகா என்ன பதில் சொல்கிறார் என்று ஞாயிறு நிகழ்ச்சியைப்பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.