அழகம்மை மருமக இப்படி படுத்தறாளே... சகுந்தலா தேவி சப்போர்ட் வேற
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில், அழகம்மை ரேவதிக்கும், லாயர் சகுந்தலா தேவி காயத்ரி ஜெயராமுக்கும் பனிப்போரே நடந்துகிட்டு இருக்கு.
இதனால, காவ்யா மதனோட கல்யாணம் கூட நின்னு போயிருது. வீடே இந்த கவலையில் இருக்க, அழகம்மையின் ரெண்டாவது மருமக பூர்ணா, குடும்பத்துக்கே தொல்லை மேல தொல்லை தர்றா.
மகேஷ் சப்போர்ட்டோட இருந்த பூர்ணாவுக்கு, தான் கர்ப்பம்னு தெரிஞ்சதும், மகேஷ் மேலயும் கோவம் வருது. குழந்தையை பெத்து தர மாட்டேன்னு பூர்ணா சொல்ல, கடுப்பாகிடறான் மகேஷ்.
அந்த குடும்பத்துக்கு வாரிசு பெத்து குடுக்க கூடாதுன்னு முடிவுல இருக்க பூர்ணா, சகுந்தலா தேவிகிட்ட போறா. என் புருஷனே எனக்குத் தெரியாம குழந்தை உருவாக காரணமாயிட்டாரு மேடம். இப்போதைக்கு குழந்தை வேணாம்னு இருந்தோம். ஆனா, மகேஷ் என்னை ஏமாத்திட்டான்னு சொல்லி அழறா.
மாமியார் கண்களில் விரலை விட்டு ஆட்டறதுன்னா இதுதானா!
எனக்கு விருப்பம் இல்லாம உருவான இந்த குழந்தையை கலைக்க அனுமதி வாங்கித் தரணும். மகேஷ்கிட்டேருந்து டைவர்ஸ் வாங்கித் தரணும் மேடம்னு சொல்லிட்டு அழறா.
பொண்டாட்டியோட அனுமதி இல்லாம குழந்தை உருவாக காரணமா இருந்தது சட்டப்படி குற்றம். சுலபமா உனக்கு கோர்ட்டுல அனுமதி வாங்கித் தரேன். டைவர்ஸ் நோட்டீசும் அனுப்பிடலாம் பூர்ணா கவலைப் படாதேன்னு சொல்லி அனுப்பறாங்க சகுந்தலா தேவி.
இனி அழகம்மை vs சகுந்தலா தேவி.. இதை காண காண சீரியல் விரும்பிகள் குஷியாகப் போறாங்க.