கேட்டீங்களாக்கா, இந்த சம்பா கூட அவ புருஷன் ரொம்ப பேசுறது இல்லியாம்!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் ரொம்ப மெதுவா கதையே இல்லாம போயிகிட்டு இருக்கு. வர வர சீரியலை பார்க்கவே புடிக்கலைன்னு பேசிக்கரங்களாம்..
இந்த சம்பா கூட அவ புருஷன் ரொம்ப பேசுறதும் இல்லியாம். அழுகாச்சி.. காதல் தோல்வின்னு கதை போறதுல யாருக்கும் ஒண்ணும் பிடிக்கலையாம்.
வினோதினி காதல்ல பிரச்சனை வந்திருச்சு. கல்யாணமே இனி அவன் கூட நடக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, வேற மாப்பிள்ளை தேடி புடிக்கறாங்க.
இதுல சம்பாவுக்கு உடன்பாடு இல்லைன்னு குடும்பமே அவளை ஒதுக்கி வைக்கறாங்க. வினோதினி மட்டும் சம்பா கூட பேசறா.எப்படி ஹரீஷை மறந்து இருப்பா விநோதினின்னு கவலைப் படறா சம்பா.
ஒருநாள் ஹரீஷ் அவன் சொந்த ஊருக்கு போறான்னு தெரிஞ்சவுடனே, மாடியில போயி தனியா அழுதுகிட்டு இருக்கா வினோதினி. அங்கே துணி காய போட வந்த சம்பாகிட்ட, அண்ணி.. ஹரீஷ் ஊருக்கு போறான்.. அவனை அவங்க அம்மா மனசு மாத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க விடாம செய்துட்டா என்ன பண்றது அண்ணின்னு அழறா.
நீ உன் காதல் மேல நம்பிக்கை வை, ஹரீஷ் மேல நம்பிக்கை வை.. எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்ற சம்பா. அப்போ அங்கே வந்த ஹரீஷ்.. சரியாய் சொன்னீங்க அக்கா..என் மேல நம்பிக்கை வைன்னு எத்தனை தடவை சொன்னேன்னு சொல்றான் ஹரீஷ்.
அவனை ஒளிஞ்சுக்கிட்டு இவ்ளோ நேரம் இந்தியா .. நான் அழுவதை வேடிக்கை பார்த்துக்கிட்டுன்னு சொல்லி, அவனை துரத்தி துரத்தி அடிக்கறா வினோதினி. அவன் வலிக்குதுன்னு சொல்ல, என்ன வினோ இப்படியா வலிக்கற மாதிரி அடிப்பாங்கன்னு சம்பா கேட்கறா.
ஐயோ அண்ணி அவன் நடிக்கறான்.. விளையாட்டுக்கு கூட அவனுக்கு வலிக்கற மாதிரி அடிக்க மாட்டேன் அண்ணின்னு வெட்கப்பட்டுக்கிட்டே சொல்ல, ஹரீஷ் ரொமான்ஸுடன் அவகிட்ட போறான்.
யார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்!
ரெண்டு பெரும் முதல்ல கீழ போங்க..துணி காய வைக்கற இடத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டுன்னு சொல்லி சிரிக்கறா.. இந்த சம்பவத்தை நினைச்சுகிட்டு, தன்னை குடும்பத்தார் ஒதுக்கிவச்சதை நினைச்சு அழறா சம்பா.