எனக்கு நீயும் வேணும் நிலாவும் வேணும்..டபுள் கேம் ஆடும் சஞ்சய்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி எதனால் நிலாவை டார்கெட் செய்து, தன் மகன் சஞ்சய்க்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்கன்ற விஷயம் இன்னும் மர்மமாவே இருக்கு.
நிலா கார்த்திக்கை காதலிக்க, நிலா சஞ்சய்யை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னது கார்த்திக்குக்கு தெரிஞ்சுருது. மனசு வேதனையில் குடிச்சுட்டு காரை ஓட்டி விபத்துல சிக்கிக்கறான் கார்த்திக்
நிலாவின் தங்கை ஸ்வேதாவை காதலிக்கறதா சொன்ன சஞ்சய், நிலாவை கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதிச்சான்னு குழம்பி போயி, சஞ்சயை சந்திக்க போன் செய்யறா.
நிலாவை எனக்கு
ஸ்வேதா கோபமாக உட்கார்ந்திருக்க, என்ன ஸ்வேதா கோபமா உட்கார்ந்திருக்கேன்னு கூலா கேட்கறான் சஞ்சய். என்ன சஞ்சய் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கறே.. என்கிட்டயும் பழகறே...நிலாவை கல்யாணம் செய்துக்க்வும் சம்மதிக்கற.. என்ன சஞ்சய் இதுன்னு கத்தறா.என்னை உனக்கு பிடிக்கலையான்னு கேட்கறா.. உன்னையும் பிடிக்கும், நிலாவையும் பிடிக்கும்னு சொல்றான் சஞ்சய்.
கோபம் குழப்பம்
நீ என்ன சொல்றே.. எனக்கு ஒன்ணுமே புரியலை.. கோபமும் வருது.. குழப்பமாவும் இருக்கு. அன்னிக்கு என்ன சொன்னே.. சும்மா அம்மாவுக்காக பொண்ணு பார்க்க வந்தேன்னுதானே சொன்னே.. இப்போ என்னையும் புடிக்கும், நிலாவையும் புடிக்கும்னு சொல்றன்னு கேட்கறா.
பிடிக்கும் நிலாவை
நிலாவை பிடிக்கும்னு சொன்னேன்..அதுல உனக்கு என்ன பிரச்சனை..நிலாவை நேரில் பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு அதான் சொன்னேன்..உனக்கு என்ன இதுலன்னு கேட்கறேன் சஞ்சய். ஏன்னா.. உன் மேல நான் பைத்தியமா இருக்கேன்.. உன்னை லவ் பண்றேன் சஞ்சய்னு சொல்றா. எஸ்..எஸ்னு அவளுக்கு தெரியாமல் குதூகலிக்கிறான் சஞ்சய்.
நிலாவும், நீயும்
சும்மா உன் மனசிலேர்ந்து இது வருதான்னு பார்க்க டீஸ் பண்ணினேன் ஸ்வேதா.நான் தனியா பிசினெஸ் பண்ண ஆசைப்படறேன். அம்மா நிலாவை கல்யாணம் செய்துகிட்டாத்தான் பணம் தருவேன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் இந்த டிராமா. நான் உன்னைத்தான் லவ் பண்றேன்.. உன்கூட வாழத்தான் ஆசைப்படறேன்னு சொல்லி அவளை நம்ப வைக்கறான்.மனசுக்குள்ள எனக்கு நீயும் வேணும், நிலாவும் வேணும்னு சொல்றான்.