Kaatrin Mozhi Serial: பூ குடுக்கறான்.. கட்டி புடிக்கறான்.. என்னங்கடா டேய்..!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேசமுடியாத கண்மணிக்கு சந்தோஷ் ஒற்றை ரோஜா குடுக்கறான்.. கட்டி புடிக்கறான்.
வாய் பேச முடியாத பொண்ணாச்சே... கட்டி புடிச்சுட்டு அப்புறம் டெண்டர் கிடைச்ச சந்தோஷத்தில் கட்டி புடிச்சுட்டேன் கண்மணி சாரின்னு சொல்றான்..
எண்ணங்கடா டேய்.. பணக்காரங்க உங்க இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் செய்வீங்களா?
அலுவலக முதலாளி
அலுவலகத்துக்கு முதலாளி சந்தோஷ்... அவனுக்கு டெண்டர் திருட்டு போனது கூட தெரியவில்லை. அலுவலகத்தை ஒப்படைத்த மாமா போன் செய்து என்ன சந்தோஷ், நர்மதா என்டர் பிரசஸ் நம்மளை விட குறைச்சலா கோட் பண்ணி இருக்காங்களாம் என்று சொல்ல சான்ஸே இல்லை மாமான்னு சொல்றான்.
Barathi Kannamma Serial: ஒண்ணுமில்லாததை ஊதி ராட்சச பலூன் ஆக்கிட்டாய்ங்களே...!
செக் பண்ணு
இல்லை சந்தோஷ் செக் பண்ணு என்று மாமா சொல்ல, அப்போதுதான் செக் பண்றான் சந்தோஷ். திருட்டு போனது தெரிய வருது. அதை கூட கண்டு பிடிக்க தெரியாம அங்கு வரும் கண்மணியிடம், கண்மணி டெண்டர் திருட்டு போயிருச்சு கண்மணி. என் கம்பியூட்டரில் இருந்து யாரோ திருட்டாங்கன்னு சொல்றன்.
கண்மணி சொல்றா
அப்போது கண்மணி சொல்றா... நான் பார்த்தேன் என்று. நீ .பார்த்தியா என்று எப்போ பார்த்தே என்று கேட்கிறான். எப்போன்னு சொன்னால்தான் கேமிராவில் பார்க்க முடியும் கண்மணி என்று அவளை துரிதப்படுத்துகிறான் சந்தோஷ். அதை கூட தேட முடியாதவனாக வாய் பேச முடியாத பெண்ணிடமே எல்லாவற்றையும் கேட்க முயலுகிறான்.
அடையாளம் காண்பிக்கிறாள்
கண்மணி திருடியவனை அடையாளம் காட்டுகிறாள். பின்னர் அவனை கண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைக்கிறான். இவன் என்ன முதலாளி... பின்னர் டெண்டர் கிடைச்சுருச்சுன்னு குதிக்கிறான். அங்கு வரும் கண்மணியை உணர்ச்சி வேகத்தில் கட்டிக்கிறானாம்.
சாரி கேட்பது
பிறகு சாரி கண்மணி என்று விலகிக்கறான். பாவம் வாய் பேச முடியாத அந்த பேதை பெண்.. சந்தோஷ் கட்டிப் பிடித்ததை எண்ணி எண்ணி வீட்டுக்கு போயி தானும் சந்தோஷும் இருப்பது போல ஒரு ஓவியம் வரைந்து வைத்து அதை எடுத்து வச்சு அழகு பார்க்கிறாள். இது எங்கு சென்று முடிய போகிறதோ...!