"ஒன் சைட் பூகம்பம்".. கலக்கும் சரண்யா.. ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: சரண்யா துராடியின் எழுச்சிகரமான போஸ்ட் ரசிகர்களை துள்ளி எழ வைத்து விட்டதாம் .அதைத்தான் இப்போது விழுந்து விழுந்து ரசிக்கிறார்களாம்.
தமிழ் டிவி உலகின் போல்டான நடிகைகளில் ஒருவர்தான் சரண்யா .கேரக்டரில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட ரொம்ப போல்டுதான் . சூப்பரான ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சரண்யா போஸ்ட் போடுவதிலும் செம போல்டுதான்.
அழுகாச்சி பிடிக்காத ஒரு நடிகை இவர் .சீரியல்களிலும் கூட அழுவது போல நடிப்பதென்றால் அடடா என்று அலுத்துக் கொள்வாராம் .துணிச்சலான போல்டான பாத்திரம்தான் ரொம்பப் பிடிக்குமாம்.
3 சீரியல்களில் ஏற்றம்
2 சீரியல்கள்தான் இவருக்கு சூப்பர் பெயரை வாங்கிக் கொடுத்தவை .ஒன்னு நெஞ்சம் மறப்பதில்லை. இன்னொன்னு ரன் சீரியல் .இரண்டிலுமே சூப்பராக நடித்திருப்பார். அதை வைத்துத்தான் இவரது சின்னத்திரை வளர்ச்சியே வந்தது என்று கூட சொல்லலாம். அதேபோல ஆயுத எழுத்து சீரியலிலும் இவர் கலக்கலாக நடிப்பை கொடுத்திருப்பார்.
செம பிசி
இவர் சீரியல்களில் மட்டுமில்லைங்க இன்ஸ்டாகிராமுலம் ரொம்பத்தான் பிசியாக இருக்கிறார் .போஸ்ட் போடுவதில் புதிய புரட்சியே செய்தவர். தனது காதலருடன் மடியில் சாய்ந்தும், மார்பில் சாய்ந்தும், கட்டி அணைத்தும் போஸ் கொடுத்து போட்டோஸ் போட்டு புரட்சி படைத்தவர் . தனது காதலை ரசிகர்களிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்.
ஒன் சைட் ஓப்பனிங்
இப்பக் கூட ஒரு போஸ் போட்டுள்ளார் .ஒரு சைட் அப்படியே கவர்ச்சிகரமாக தெரிகிறது .புன்னகை பூக்க ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார் சரண்யா துராடி .ரசிகர்கள் சும்மாவை சுத்தி சுத்தி வருவார்கள் .இப்படிப்பட்ட தரிசனம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா. கமெண்ட்டுகளைக் குவித்து குதூகலமாக மகிழ்ந்து கொண்டுள்ளனராம்.
செம அழகு
நைஸ், லவ்லி ,செம அழகு என்று விதம் விதமாக கமெண்ட்டுகள் சரண்யாவை நோக்கி பாய்ந்து கொண்டுள்ளன . அத்தோடு இப்போது எந்த சீரியலில் நடிக்கிறீங்க மேடம் என்றும் அன்போடு கேட்டுள்ளனர் ரசிகர்கள் .சரண்யா வழக்கம் போல எந்தப் பதிலும் கொடுக்கவில்லை .ஆனாலும் ரசிகர்களின் அன்பு மழையில் தொடர்ந்து நனைந்தபடிதான் உள்ளார் சரண்யா.
பார்த்தாச்சு பார்த்தாச்சு
இன்னொரு முக்கிய அப்டேட்டையும் தனது டிவிட்டரில் போட்டுள்ளார் சரண்யா .அதாவது ஒரு வழியாக சூரரைப் போற்று படம் பார்த்து விட்டாராம் .அதுகுறித்து போட்டுள்ள போஸ்ட்டில், ஒரு வழியாக சூரரைப் போற்று பார்த்து விட்டேன்.நேற்று ராத்திரிதான் பார்த்தேன். சூர்யாவுக்கு இது சூப்பர் படம் என்று புளகாங்கிதப்பட்டுள்ளார். அதேபோல அட்லீ தயாரிப்பான அந்தகாரம் படத்தையும் பார்த்து விட்டாராம். அதையும் புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.
செல்லக் கண்மணி
ரசிகர்கள் இவருக்கு வைத்துள்ள பெயர் செல்லக் கண்மணி. அவரும் ரசிகர்களை செல்லமாகத்தான் கூப்பிடுவார் .இந்த பாசப் பிணைப்புதான் தன்னையும் ஆக்டிவாக வைத்துக் கொள்வதாக கூறி பெருமைப்படும் சரண்யா தொடர்ந்து படங்களைப் போட்டுக் கொண்டபடிதான் உள்ளார் . ரசிகர்கள்தான் தனது வளர்ச்சிக்கு முக்கியமே என்று கூறும் அவரது படங்களை தொடர்ந்து ரசித்து ரசிகர்களும் விடாமல் கூடவே உள்ளனர்தான்.