Naam Iruvar Namakku Iruvar Serial: நிலாச்சோறு.. சீம்பால் சீரியல் உடமை ஆகிப்போச்சு!
சென்னை: நிலாச்சோறு எப்படி சீரியல் உடமை ஆகிப்போச்சோ.. அப்படி சீம்பாலும் சீரியல் உடமை ஆகிப்போச்சு.
பெரிய உருண்டையா உருட்டி, அன்பானவங்க கையில் கொடுக்க நாம் வாங்கி சாப்பிடுவது என்பது நிலாச்சோறு.
பிள்ளை உண்டாகி இருப்பவங்களுக்கு சீம்பால் ரொம்ப பிடிக்கும். சீம்பால் சாப்பிட்டா பிள்ளைத்தாய்ச்சி பொண்ணுங்க ஹெல்தியா இருப்பாங்கன்னு சீரியல்களில் இப்போ சொல்றாங்க.
சீரியல்கள் நிலாச்சோறு
சீரியல்களில் இப்போது அன்பு பொங்கி வழியும்போது நிலாச்சோறு சாப்பிடுவது அடிக்கடி நடக்கிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாரதி கண்ணம்மா சீரியல்களின் சங்கமத்தில் தனம் சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருக்க, கடைக்குட்டி கண்ணன் அண்ணி, நிலாச்சோறு உருட்டி குடுப்பாங்க பாருங்க.. அவ்ளோ ருசியா இருக்கும்னு சொல்றான்.
தனம் சாப்பாடு
அப்படியா.. அப்படி ஒரு நாள் கூட நாங்க சாப்பிட்டது இல்லை என்று அகிலன் சொல்ல, அண்ணி குடுங்க அண்ணின்னு சொல்றான் கண்ணன். சப்பாத்தி எப்படிடா குடுக்க முடியும்னு கேட்கிறாள் தனம். எனக்கு இந்த சோறு குடுங்கன்னு கேட்கறான் கண்ணன். தனம் கண்ணனுக்கு மட்டும் கொடுக்க, அகிலன் தனக்கும் கேட்க, பாரதியும் கேட்க, இப்படியாக நிலாச்சோறு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு ரவுண்டு வருகிறது.
கர்ப்பிணி சீம்பால்
பிள்ளை உண்டான பொண்ணுங்களுக்கு மசக்கை வாந்தியில் எதுவுமே பிடிக்காது. ஆனால், நம்ம கல்யாண வீடு சீரியலில் சவிதா உண்டாகி இருக்க, அவங்க வீட்டில் இருந்து சீம்பால் வாய்க்கு நல்லா இருக்கும்னு காய்ச்சி கொண்டு வந்து தர்றாங்க. அந்த பாலை சவீதா ஆசையா குடிக்கறா
விஜய் டிவி
இதே மாதிரி விஜய் டிவி சீரியலில் மாயன் தன் தங்கச்சி ஆனந்திக்கு ஆசையா சீம்பால் கொண்டு வந்து குடுக்கறான். அந்த பாலை தேவியின் மாமா வாங்கிட்டு போயி, சீம்பாலில் அல்வா கிண்டினால் நல்லா இருக்கும்னு சொல்லிட்டு எடுத்துட்டு போறார்.
நிலாச்சோறு கூட ஓகே.. இந்த சீம்பால் மேட்டர் புதுசா இருக்கு...!