Sembaruthi Serial: கல்யாணமே செல்லாதுங்கறேன்..தலை தீபாவளியா?
சென்னை: ஊரார் உற்றார் உறவினர் பார்க்க கல்யாணம் நடக்கல..கோயிலில் கட்டிய தாலி...இன்னும் தம்பதியராகவும் வாழலை... கல்யாணம் நடந்தது பெத்த அம்மாவுக்குத் தெரியலை.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில்தான் மேற்கண்ட கதை.திருட்டு கல்யாணம் செய்துக்கிட்டவங்க ஆதியும், பார்வதியும். ஒரு தவிர்க்க முடியாத சூழலில் நடந்த கல்யாணம்தான்.
இருந்தாலும் ஆதியின் அப்பா அகிலாண்டேஸ்வரி அம்மாவின் புருஷனுக்கு இந்த கல்யாணம் நடந்தது தெரியும். அதனால், தங்கள் வீட்டுடிரைவரிடம் போயி, உன் மாப்பிளையை தலை தீபாவளிக்கு அழைன்னு சொல்றாங்க.
அம்மா ஏத்துக்குவாங்களான்னு
என்ன ஐயா சொல்றீங்க..இந்த கல்யாணமே செல்லாது... அகிலாம்மா ஏத்துக்குவாங்களான்னு எனக்கு இன்னும் சந்தேகமா இருக்கு.நீங்க என்னடானா தலை தீபாவளிக்கு மாப்பிள்ளையை அழைங்கன்னு சொல்றீங்கன்னு கேட்கிறார் பார்வதியின் அப்பா சுந்தரம்.
Eeramana Rojave Serial: மருமகள்களை தொடப்ப கட்டையால் அடிக்கறதா?
அகிலா நாளைக்கே
அகிலா நாளைக்கே இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்கன்னு வச்சுக்கோ சுந்தரம்.ஆனல், தலை தீபாவளி பிறகு வருமான்னு ஒரு கேள்வி கேட்கறார் ஆதியின் அப்பா. ஐயா எனக்கு அதெல்லாம் ஒன்னும் சொல்ல தெரியாது ஐயா. அகிலாம்மாவுக்கு தெரியாமல் தப்புக்கு மேல தப்பை என்னால் செய்ய முடியாதுன்னு சொல்றார் சுந்தரம்.
கோயிலில் பூ
சுந்தரம் உன் மன திருப்திக்கு கோயிலில் பூ போட்டு பார்க்கலாம். இந்த கல்யாணத்தை அகிலா ஏத்துக்குவான்னு தெய்வம் சொல்லுச்சுன்னா, அதுக்கு உரிய பூவைத் தரட்டும். ஏத்துக்க மாட்டான்னா அதுக்கு உரிய பூ தரட்டும். பிறகு ஆதியை தலை தீபாவளிக்கு அழைக்கறதா வேணாமான்னு நீ முடிவு எடுன்னு சொல்றார் ஆதியின் அப்பா.
ஒரு வழியாக சுந்தரம்
சுந்தரம் ஆதியின் அப்பா தந்த இந்த பிளானுக்கு ஒரு வழியாக சம்மதிச்சு, சரி ஐயா நாளைக்கு கோயிலுக்கு போகலாம்னு சொல்றார்.பார்வதி மனசு தாங்காமல் தாயே நாளைக்கு நீ நல்ல வாக்கு குடுத்தாதான் என் அப்பா மாமாவை தலை தீபாவளிக்கு அழைப்பார்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கா பார்வதி.
கதை வேடிக்கையாத்தான் போகுது. அந்த வேடிக்கையைத்தானே நாமும் விரும்பிப் பார்க்கறோம்?!