Sembaruthi Serial: ஆதி பார்வதி கல்யாணம் அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது!
சென்னை: ஆதி பார்வதி ரகசிய கல்யாணம் செய்துகிட்டது அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது...அதுக்கப்புறம் நாங்க எப்போ கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உமா சொல்றாங்க.
யாரு இந்த உமா..ஆதி பார்வதி உலகத்துக்கே தெரியும் ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் நாயகன் நாயகி. இந்த சீரியலில் உமாவாக நடிப்பவர் ஜெனிஃபர். இவரை ஆதிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்பது அகிலாண்டேஸ்வரி விருப்பம்.
உமா அதாவது ஜெனிஃபர் சரவணன் என்கிற கார் ஓட்டுனரை காதலிக்கிறார். செம்பருத்தி சீரியல் முடிந்த பிறகு கல்யாணம் செய்துக்கலாம் என்றால் சீரியல் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.
ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவியில் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது செம்பருத்தி சீரியல். இதில் பிரியா ராமன் அகிலாண்டேஸ்வரியாக நடிக்கிறாரா. பெரும் தொழிலதிபர். இவரது மகன் ஆதி என்கிற கார்த்திக். இவன் அகிலாண்டேஸ்வரியின் கார் டிரைவர் மகள் அதோடு வீட்டின் வேலைக்காரி பார்வதியை காதலித்து அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணமும் செய்துக்கறான்.
தெரியாது அகிலாண்டேஸ்வரிக்கு
இவர்கள் திருமணம் செய்து நிஜத்திலேயே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகுது.இன்னமும் அகிலாண்டேஸ்வரிக்குத் தெரியாமலே காப்பாற்றி வருகின்றனர். இது எப்போது அவங்களுக்கு தெரிவது, அதற்குப் பிறகான கதை எப்படி நகரும், எத்தனை வருடங்கள் நீளும் என்று கண்ணைக் கட்டிவிட்டது ஜெனிஃபருக்கு.
கல்யாணத்தை செய்துக்கலாம்
சரி நம்ம காதல் கல்யாணத்தை செய்துக்கலாம்னு முடிவெடுத்த உமா என்கிற ஜெனிஃபர் சீரியலில் ஆதி பார்வதி கல்யாணம் செய்துக்கிட்டது போல எளிய முறையில் கோயிலில் கல்யாணம் செய்துகிட்டாங்களாம். கணவர் பெயர் சரவணன்.இவர் கார் டிரைவராக அறிமுகம் ஆனவர். ஆனால், சாதாரண ஆள் இல்லையாம். இன்ஜியரிங் முடிச்சுட்டு தானே டிராவல்ஸ் வச்சு நடத்தி பெரிய ஆளாக வந்துவிட்டாராம் சரவணன்.
குடும்ப விருதுகள்
ஜீ தமிழ் டிவி நடத்திய குடும்ப விருதுகள் விழாவில் கூட ஆதி பார்வதி விருது வாங்கினார்கள்.ஜீ தமிழ் டிவியில் சக்கை போடு போட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் இது. ஆதியும், பார்வதியும் கூட மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்.ஆதிக்கு தனி பெண் ரசிகை .பட்டாளமே உண்டு.