Sembaruthi Serial: செம்பருத்தி செம்பருத்தி.. பூவைப் போல பெண்ணொருத்தி!
Recommended Video
சென்னை: செம்பருத்தி பூவைப்போல அழகான பார்வதியை நேற்று செம்பருத்தி சீரியலில் பார்க்க முடியலை. அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தாலும் பிரியா ராமனை பார்த்து மகிழ்ந்தார்கள்.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பார்வதிக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள்.அதே சமயம் ஆதிக்கும் பெண்கள் இடையே நல்ல வரவேற்பு.
ஒரு எபிசோடில் ஆதி வரலேன்னாலும்.. பார்வதி வரலேன்னாலும். அகிலாண்டேஸ்வரி வரலேன்னாலும் ஏமாற்றம் அடைபவர்கள் அதிகம்.
குட் வில் அம்பாசிடர்
கம்பெனியின் குட்வில் அம்பாசிடராக இரண்டாவது மருமகள் ஐஸ்வர்யாவை நிறுத்தப் போகிறேன் என்று அகிலா முடிவெடுத்து இருக்க... அந்த குடும்பத்துக்கு கெடுதலை செய்யவே வீட்டினுள் நுழைந்து இருக்கும் மித்ரா தனக்கு அந்த பதவி வேண்டும் என்று வனஜாவோடு சேர்ந்து காய் நகர்த்துகிறாள் அக்கா நந்தினியுடன் ஆலோசனைப்படி
சம்மதம் அகிலாண்டேஸ்வரி
வனஜாவின் பேச்சை கேட்டு மித்ராவும் நடிக்க, உன் மனசில் என்ன இருக்குதுன்னு எனக்கு எப்படித் தெரியும் மித்ரா. சரி, உன்னையே குட்வில் அம்பாசிடர் பதவிக்கு நிறுத்தறேன்னு சொல்றாங்க. இதை ஆதி கேட்டுடறான்..
அம்மாவை எதிர்த்து
அப்பா... அம்மா மித்ராவை குட்வில் அம்பாசிடரா நிறுத்த முடிவு பண்ணிட்டாங்க. அவங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். கூட சித்தியும் இருந்தாங்க.நந்தினி சொல்லித்தான் இதெல்லாம் நடக்குது. இதை சாக்கா வச்சு அக்கா நந்தினி கூட சேர்ந்துக்கிட்டு மித்ரா நம்ம கம்பெனியையே அழிச்சுருவா. அதனால் நான் அம்மாவுக்கு எதிரா பார்வதியை நிறுத்த முடிவு செய்திருக்கேன்னு ஆதி சொல்றான்.
முடியுமா பார்வதியால்
பார்வதியால் முடியுமா ஆதின்னு அப்பா கேட்க... முடியும்ப்பா..பிராண்ட் அம்பாஸிடரா பார்வதி அம்மாகிட்டே நல்ல பெயர்தான் எடுத்து இருக்கா. ஆரம்பத்தில் அம்மா வருத்தம்தான் படுவாங்க. ஆனால், போகப் போக அவங்க நல்லதுக்குத்தான்னு அம்மாவுக்கு புரிய வரும்ப்பான்னு ஆதி சொல்றான்.
இவங்கப் பேச்சில் எபிசோட் நகர்ந்துவிட்டதால் செம்பருத்தி பூப்போல இருக்கும் பார்வதி நேற்றைய எபிசோடில் இல்லை.அதான் வருத்தம்.