Sembaruthi Serial: செம்பருத்தி ... சூப்பர் மாம் அகிலாண்டேஸ்வரி
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் இப்போ டல்லடிக்குதுன்னு பலரும் சொன்னாலும், பார்க்கறவங்க பார்க்கத்தான் செய்யறாங்க. ரேட்டிங் அதே நிலையில்தான் இருக்கிறது.
சீரியல் ஏன் டல்லடிக்குதுன்னு ஒரு கேள்வி வருகையில், ஆதி பார்வதி ஜோடியின் ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. அது மட்டுமில்லாமல் முன்பு போல ஆதிக்கு தினம் தினம் காட்சிகள் சீரியலில் இல்லை.
ஏன்...தொடர்ந்து இரண்டு எபிசோட்களில் கூட ஆதி தலைக் காட்டாமல் இருக்கிறார். இதனாலும்கூட சீரியல் டல்லடிக்குது என்று ரசிகர்கள் சொல்வார்கள்.
நல்ல குணவதியா அகிலா
என்னதான் தொழிலதிபர், பெரும் பணக்கார பெண் என்றாலும் நல்ல குணவதியா அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தை படைத்து இவ்வளவு நல்ல அம்மாவா ஆதிக்குன்னு கேட்கும் படி பிரியா ராமன் கதாபாத்திரம் இருக்கிறது.
Thirumanam serial: அடப் பாவிங்களா... இன்னுமா ஒண்ணு சேராம இருக்கீங்க?
பேசினான் ஆதி
அதி தனக்கு விபத்து நடந்து ஆபரேஷன் முடிந்து தான் மயக்கத்தில் இருந்தபோது தன்னிடம் எதோ பேசினான். அது ரேண்டமாக அவ்வப்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு., இதை கணவனிடம் கேட்டால், ஆதி அப்படி எதுவும் உன்கிட்டே பேசலை அகிலான்னு பொய் சொல்லிடறார்.
ஆதி குரல்
கண்ணை மூடினால் ஆதி தன்னிடம் எதோ பேசியது கேட்க கேட்க குழப்பத்துக்கு வந்துடறாங்க அகிலாண்டேஸ்வரி. புருஷனே ஆதி தன்னிடம் பேசவில்லை எனும்போது ஆதியிடம் பேசினாயா என்று எப்படி கேட்பது என்கிற டீசன்ஸியை மெயிட்டெயின் பண்றாங்க. ஆதிக்கும், பார்வதிக்கும் நெருக்கம் இருக்கிறது என்று தெரிந்தும், ஒரு நாளும் ஆதியை கண்காணித்ததோ, அவர்கள் இருவரும் பேசும்போது ஒட்டுக் கேட்பது என்பதோ இல்லாத நல்ல அம்மாவா இருக்காங்க அகிலாண்டேஸ்வரி.
கடைசியாக மருத்துவர்
கடைசியாக ரொம்ப டிஸ்டர்ப் ஆகி..மன நல மருத்துவரிடம் போகும் அளவுக்கு நிலைமை சென்றும், அவங்க 90 சதவிகிதம் ஆதி உங்க கூட பேசி இருக்கார் என்பதை உறுதி செய்ய, அப்போது கூட நூறு சதவிகிதம்ன்னு நீங்க சொல்லலியே டாக்டர்.நான் எப்படி இதை ஆதிகிட்டே கேட்க முடியும்னு சொல்றாங்க .உண்மையில் ஜெம் கேரக்டர் அகிலாண்டேஸ்வரி.