ரோஜாவைக் கொடுக்க.. அது தவறி விழ.. குனிந்து எடுக்கப் போக.. கன்னத்தில் பதிந்த முத்தம்!
சென்னை: விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர்னு ஒரு சீரியல். ஆர்ஜே.செந்தில் இரட்டை வேஷத்துல இதுல நடிச்சுருக்கார். இவங்க இரட்டை குழந்தைகளும் கூட.
ஒருத்தர் டாக்டர், ஒருத்தர் கிராமத்துல பொறுப்பு இல்லாம சுத்தறவர். இருவருக்கும் தாங்கள்தான் அண்ணன் தம்பின்னு கூட தெரியலை. டாக்டருக்கு உறவு முறையில் ஒரு கிராமத்து குத்துவிளக்கு மனைவியா அமையுது.
அதிகம் படிக்காம கிராமத்தில் சுத்தி திரியும் இன்னொருத்தனுக்கு, படிச்ச மனைவியா மாட்டுது. இவங்க குடும்பம் எப்படி நடத்தறாங்கன்னுதான் இப்போதைக்கு கதை.
கட்டிய தாலியை முத்துச்செல்வி உள்ளே ஒளிச்சு வக்கிறாளே.. அப்ப கண்ணன் யாருக்கு?
பொறந்த நாள்
டாக்டருக்கு இன்னிக்கு பொறந்த நாள்... மனைவி என்ன பரிசு தருவான்னு ஆவலா காத்துகிட்டு இருக்கான் இரட்டை பிள்ளைகளில் இரு வீட்டிலும் இன்னும் தம்பதி சேர்ந்து வாழலை. டாக்டர் செந்தில் பொண்டாட்டி வீட்டுக்கு வந்திருக்கார்.
தாஜ்மகால்
டாகடர் புருஷனுக்கு பொறந்தநாள் பரிசு மனைவி குடுக்க, நான் பெரிசா எதிர்பார்க்கறேன். .சப்புன்னு ஆச்சு.. அப்செட் ஆயிருவேன்னு சொல்றான். பிரிச்சு பாருங்கன்னு இவள் சொல்ல அவன் பிரிக்க அதில் ரெட்டை சிட்டு குருவி. நினைச்சேன்.. இப்படித்தான் சொதப்புவேன்னு. என் டேஸ்டுக்கு நீ ஒத்து வர மாட்டேன்னு சொல்றான். இப்போ இதை பாருங்கன்னு இன்னொரு பரிசு தர்றா.. இந்த மினுக் மினுக்னு லைட்டு எரியும்.. தாஜ்மகால்தானேன்னு கேட்க அவள் ஆமாம்னு சொல்லறா. கடுப்பாகிறான் டாக்டர்.
மனைவி கவிதை
திடீர்னு 10 குழந்தைகள் வர்றாங்க. அவங்க கையில கணவனைப் பற்றி மனைவி எழுதிய கவிதை. அதை குழந்தைங்க கோரஸாக வாசிக்க, நெகிழ்ந்து போறார் டாக்டர் செந்தில். சொதப்பிட்டு இவ்ளோ சஸ்பென்ஸ் நல்ல கிஃப்ட் குடுத்திருக்கே.. இதுமாதிரி ஒரு பொறந்த நாளும் நான் கொண்டாடியதில்லைன்னு சொல்றான்.
கன்னத்தில் முத்தம்
பதிலுக்கு டாக்டர் செந்தில் மனைவிக்கு ரோஜா கொடுக்க அது தவறி கீழே விழுந்துருது. இருவரும் குனிந்து எடுக்கப் போக, மனைவியின் வாய் செந்திலின் கன்னத்தில் பதிந்து உதடு தானா முத்தமிட்டுடறது. இது ஒரு வித கன்னம் வாய் மோதல்னு வச்சுக்கோங்க.
இருக்கே
வாயிலேயே கிஃப்ட் வச்சுக்கிட்டு, இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கியே... நேத்து நைட்டு, இல்லை காலைல குடுத்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்னு சொல்றான்.. ஐயோ நான் வேணும்னு தரலைங்க.. குனிஞ்சு ரோஜாவை எடுத்தப்போன்னு மழுப்பறா.
எனக்கு வேணாம்
அப்போ நிஜமா குடுக்கலியான்னு கேட்கறான். இல்லைன்னு சொல்றா அவ. அப்படீன்னா விருப்பம் இல்லாம கொடுத்தது எனக்கு வேணாம். நீயே திருப்பி வாங்கிக்கோன்னு துரத்த அவள் ஓடுகிறா. இவர்கள் ரொமான்ஸ் இப்படி போகுது.
கிராமத்துக்காரன்
ரெட்டையர்களில் கிராமத்துக்காரன் செந்திலுக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லலை.செந்தில் நண்பன், செந்திலின் மனைவிக்கு போன் செய்து, பொறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னீங்களான்னு கேட்கறான். சரி, சரி நான் பார்த்துக்கறேன்.. நீ போனை வைன்னு சொல்றா இவள்.
டேய் எந்திரிடா.. நாம ஒரு இடத்துக்கு போறோம்னு சொல்றா. இப்போ எங்க போறது... ராத்திரி ஆயிருச்சு.. வாழ்த்து மட்டும் சொல்லு போதும்னு சொல்றான். நீ வா என் கூடன்னு ரொம்ப தூரம் போயி ஒரு குடோனுக்கு அழைச்சுட்டு போறா.
கட்டி புடிச்சுட்டான்
என்ன இங்க மேஜிக் பண்ண போறியா இந்த குடோன்ல ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றான். மேஜிக்த்தான் பண்ண போறேன்னு சொல்றா. திடீர்னு பார்த்தா கலர் கலர் லைட் எரியுது. திகைச்சு போயி பார்க்க..சிவப்புத துணியால் போர்த்தி இருப்பதை பிரித்து பார்க்க சொல்றா. அடடா.. புத்தம் புதிய புல்லட் பைக்.
ஒரு ரவுண்டு
அந்த புல்லட்டைப் பார்த்து அதுக்கு முத்தம் கொடுத்துட்டு, மனைவியை இறுக கட்டிப்பிடிருச்சுக்கறான் இவன். பிறகு அவள் வண்டியில் உட்கார்ந்து, வாடா நீயும் உட்காருன்னு சொல்லி சொன்னா நம்ப மாட்டீங்க.. புல்லட்டை தானே ஒட்டி அந்த குடோனை பல ரவுண்டுகள் புல்லட்டில் சுத்தி வர்றா.
இந்த காலத்து பொண்ணுங்ககிட்ட திறமையும் இருக்கு.. புருஷன் மேல அன்பும் ஆசையும் கூட நிறைஞ்சு கிடக்குன்றதை தெரிஞ்சுக்கிட்டா சரி.