அகிலாண்டேஸ்வரி அம்மாவோட சொத்தை செண்டிமெண்ட் காப்பாத்திருச்சுங்கோ...
Recommended Video
சென்னை:ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் அனைவரின் மனம் கவர்ந்த சீரியலா இருக்கு.ஒரு பணக்கார குடும்பம், மகாராணி மாதிரி அகிலேண்டேஸ்வரி அம்மா இருக்க, அந்த வீட்டில் வேலை செய்ய வந்தவள்தான் செம்பருத்தி.
அகிலாண்டேஸ்வரி அம்மாவின் மகன் ஆதி, செம்பருத்தியை ரகசிய திருமணம் செய்துக்கறான். வீட்டில் சதி செய்ய மூணு பெண்கள் இருக்காங்க.இதில் மித்ரா அகிலாண்டேஸ்வரியின் மனம் கவர்ந்தவள்.
மித்ராவுக்கு தமது பிஸினெஸ் ஷேர்களில் 30 சதவிகிதத்தை எழுதிக் கொடுப்பதாக அகிலாண்டேஸ்வரி ஏற்பாடு செய்யறாங்க. இதற்குள் ஷேர் கைக்கு வந்துவிடும் என்று, மித்ராவுக்கு வேண்டிய பொண்ணு, மீதி ஷேர்களையும் பிடுங்க திட்டமிடுகிறான்.
பவுர்ணமி பாப்பா ராசி இல்லாதவளா... மகளை பார்வையால் வெறுக்கும் அப்பா!
அகிலாண்டேஸ்வரி
எப்போதும் பூஜை அறையில் செம்பருத்தியுடன் பக்தியில், பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவங்க அகிலாண்டேஸ்வரி. எதுக்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்ப்பாங்க.இந்த சமயத்துலதான் செம்பருத்தி பூஜை அறையில் வெளக்கேத்தி தாயே அம்மா, மித்ரா பத்தின உண்மை தெரியாம ஷேர் எழுதித் தரேன்னு சொல்லி இருக்காங்க.
எதுவும் முடியலை
எப்போதும் பூஜை அறையில் செம்பருத்தியுடன் பக்தியில், பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவங்க அகிலாண்டேஸ்வரி. எதுக்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்ப்பாங்க.இந்த சமயத்துலதான் செம்பருத்தி பூஜை அறையில் வெளக்கேத்தி தாயே அம்மா, மித்ரா பத்தின உண்மை தெரியாம ஷேர் எழுதித் தரேன்னு சொல்லி இருக்காங்க.
எதுவும் முடியலை
மித்ராவுக்கு அம்மா கை எழுத்து போட்டுத்தர கூடாது. என் புருஷனாலயும் மித்ரா பத்தின உண்மையை சொல்ல முடியலை. அந்த சூழலில் அவர் இருக்கார். அதனால், எப்படியாவது மித்ராவுக்கு ஷேர் பாத்திரத்துல கை எழுத்து போடாதபடி செய்துரு. மூத்த மருமகளா என்னால எதுபவும் செய்ய முடியலைன்னு வெண்டிக்காரா.
சென்டிமென்ட் பேனா
அகிலாண்டேஸ்வரி அம்மா கை எழுத்து போட ரெடியாக்கறாங்க... வழக்கமா தான் முக்கியமான டாக்குமெண்ட்ஸ்ல சைன் போடற சென்டிமென்ட் பேனாவை எடுக்கறாங்க... இங்க மித்ராவுக்கு வேண்டிய பொண்ணு மீதி ஷேர்ஸ் வாங்க பேசசுவார்த்தை நடத்தறாங்க.
செய்த தப்பு
இதுக்கு நடுவுல ரொம்ப வருஷமா டிரைவரா வேலை பார்க்கற சுந்தரத்தை திருட்டு பட்டம் கட்டி, ஆஃபீஸை விட்டு துரத்தி விடுகிறாள்.இது தெரியாத அகிலாண்டேஸ்வரி கை எழுத்து போட போக, பேணா எழுதலை. சரி வேற பேப்பர்ல எழுதி பார்க்கலாம்னு எழுதினா, அதுல எழுதுது.
விளக்கு கவிழ
பூஜை அறையிலிருந்து திடீர்னு சத்தம்.... என்னடான்னு ஓடிப் பார்த்தா பூனை தட்டி காமாட்சி விளக்கு கவிழ்ந்து கிடக்கு. மனசு சரியில்லாம மறுபடியும் வந்து கை எழுத்து போட முயற்சி செய்யறாங்க.
பொளேர் அடி
திடீரென ஆதி மித்ரா என்று கத்தியபடி வீட்டுக்குள் நுழைகிறான். வந்த வேகத்தில் என்ன காரியம் செய்தேன்னு மித்ராவை பொளேர் என்று கன்னத்தில் அடிக்கிறான்.
நீங்களும்
ஏன் ஆதி மித்ராவை அடிச்சேன்னு அகிலாண்டேஸ்வரி கேட்க, உண்மை தெரிஞ்சா நீங்களும் அவளை அடிப்பீங்கம்மான்னு சொல்றான் ஆதி. ,நம்ம வீட்டுல இத்தனை வருஷம் வேலை பார்த்த சுந்தரம் அங்கிளை அடிச்சு துரத்தி இருக்காம்மான்னு சொல்ல அகிலாண்டேஸ்வரி அதிர்ந்து சுத்தரத்தை அழைச்சுட்டு வர சொல்றாங்க.
விஷம்
அவமானம் தாங்க முடியாத சுந்தரம், அம்மா முன்னாடி என்னால விசாரணைக்கு நிக்க முடியாதுன்னு இறந்து போன பொண்டாட்டி படத்துக்கு முன்னால நின்னு சொல்லிகிட்டே விஷத்தை குடிச்சுடறார்.