Naam Iruvar Namakku Iruvar Serial: பிழிய பிழிய சென்டிமென்ட்.. மாயனை வதைக்குதே!
மாயன் கலர் கலர் கலரான ஜிங்குச்சான் லுங்கி, சட்டை, கண்ணாடி என்று ஆடிய ஆட்டம் என்ன, சொட்டப்பு, சித்தப்பு, நெட்டப்பு, என்று கலாய்ச்சு ஆடிய ஆட்டம் என்ன என்று இருந்தவன், இப்போது தங்கை கல்யாணம் என்று வந்த நிலையில் சென்டிமென்ட வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடி வருகிறான்.
மாப்பிளையாக வந்த தேவியின் தம்பி அதாவது மாயன் நெட்டப்பு என்று கலாய்த்த மாப்பிள்ளை மாயனை கல்யாணத்தில் இருக்க கூடாது என்று கண்டிஷன் போட ஐயோ பாவம் என்று ஆகி விட்டான் மாயன்.
பழி வாங்கும் விதமாக
மாப்பிள்ளை மாயனை பழி வாங்கும் விதமாக உன் தங்கை கல்யாணத்தை நீ பார்க்க கூடாது என்று கூறி மண்டபத்தை விட்டு வெளியில் போக வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விடுகிறான், எங்காவது ஒரு மூலையில் இருந்து தங்கச்சி கல்யாணத்தை பார்த்துவிட்டு போயிடறேன்னு மாயன் மாப்பிள்ளையிடம் கெஞ்ச. மாப்பிள்ளை ஒரேயடியாக முகத்தை திருப்பிக் கொள்கிறான்.
பாடாத குறை
சோக கீதம் பாடாத குறையாக மண்டபத்தை விட்டு வெளியேறும் மாயன் தங்கச்சியை நினைச்சுகிட்டு இருக்க தேவி மாயனை காணோமே என்று தேடிக்கொண்டே இருக்கிறாள். மாயனோ தங்கச்சியின் நினைவில் கல்யாணம் நடந்து இருக்குமோ.. தாலி கட்டி இருப்பானோ... ஒரு போன் செய்து பார்க்கலாமோன்னு நினைச்சுட்டு இருக்கான். அண்ணன் தங்கச்சி பாசம்னா என்னன்னு இது ஒரு விதமா காண்பிச்சு இருக்காங்க .
கல்யாணம் நடக்குமா?
மாயன் இல்லாம கல்யாணம் நடக்குமா என்று எதிர்பார்ப்பில் இருக்கும் சீரியல் ஆர்வலர்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும்படி விஜய் டிவியின் ட்வீட்டர் வலைத் தளத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடின் முன்னோட்டத்தை பதிவிட்டு உள்ளார்கள். அதில், மாயனின் தந்தை பொறுக்க முடியாமல் மகளின் கல்யாணத்தை நிறுத்தி விட்டு மகளை மண மேடையில் இருந்து எழும்படி உத்தரவிடுகிறார்.
அவள் வருவாளா?
மாயனின் தங்கை தேவியின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொள்வதால், அப்பா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும்போது அவள் வரமாட்டாள் என்று சொல்ல, மாயனின் தங்கை எழுந்து வருவாளா மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.