உடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும்போது உடன் நடிப்பவர்கள் அம்மா அப்பா என்று குடும்பமாக நடிக்கும்போது அவர்களுடன் உண்மையான உறவு ஏற்பட்டு பொஸசிவ் வந்துவிடுகிறது என்று ஒரு சீரியல் நடிகை சொன்னார்.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகள் மற்றும் அவர்களது ரசிகைகளுக்கான விவாதம் நடைப்பெற்றது.
அப்போது பேசிய நடிகைகளும், அவர்களது ரசிகைகளும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
கோபமே வராது
எனக்கு எப்போதும் கோபமே வராது. வீட்டில், ஏதாவது பிரச்சனை என்றால் கூட அது என்னை பாதிக்காது. அப்படிப்பட்ட கேரக்டர் நான். சீரியலில் வில்லியா நடிச்சு.. பார்க்கறவங்ககிட்டே எல்லாம் கோபப்பட ஆரம்பிச்சுட்டேன். கேப் டிரைவர்கிட்டே கூட இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கோபமா கேட்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறமாத்தான் இது நம்ம கேரக்டர் இல்லையே.. நடிக்க ஆரம்பிச்சு அதே கேரக்டரில் ஒன்றி விட்டோம் என்று கொஞ்சம் கட்டுப்படுத்திக்க ஆரம்பிச்சேன் என்று கூறினார் ஒரு நடிகை.
வில்லியா நடிச்சு
பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ், நான் எல்லா சீரியலிலும் வில்லியா நடிச்சு நடிச்சு என் முகமே இறுகிப் போன மாதிரிதான் எப்போதும் பார்க்கறவங்களுக்கு தோணும். வீட்டுக்கு போனா குழந்தைங்க கிட்டே கூட கோபமா பேசற மாதிரி ஆயிருச்சு. எங்கியாவது கடைக்கு போனால் கூட குழந்தைங்க என்னை பார்த்துட்டு பயந்து போயி ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.
அழுது இருக்கேன்
இதை பார்த்து எத்தனையோ முறை மறைஞ்சு நின்னு அழுது இருக்கேன். என்று சொன்னார் சாந்தி வில்லியம்ஸ். இவர் இப்போது சன் டிவியில் நடித்து வரும் சந்திரலேகா சீரியலில் எப்போதும் சந்திராவுக்கு விஷம் வைப்பதும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைப்பதும் என்று கொடூர செயல்களையே செய்து கொண்டு இருப்பார்.
உடன் நடிக்கும் உறவுகள்
உடன் நடிக்கும் உறவுகள் அம்மா, அப்பா என்று எப்போதும் அவர்களுடனே டிராவல் செய்துகிட்டு இருப்பதால் அவங்க கூட உண்மையான உறவு அன்பு எல்லாம் வந்துரும். அவங்க வேற யார்கிட்டேயாவவது பேசினால் பொஸசிவ் கூட வந்துரும் என்று ஒரு நடிகை சொல்ல, அப்போது உடன் ஜோடியாக நடிப்பவர்களிடமும் அப்படி நினைப்பு வருமா என்று கோபிநாத் கேட்டார்.
அப்படி இல்லை
அப்படி இல்லை என்று அந்த நடிகை மறுத்து பேச, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அப்படி நிச்சயம் வரும் எனக்கு வந்து இருக்கு. உடன் நடிப்பவர்கள் நமக்குத்தான் சொந்தம் என்பது போல. ஆனல், நான் சித்ராவா மாறி இது நடிப்புதான்னு சொல்லி மனசுக்கு கேட் போட்டுகிட்டேன் இப்படி நிச்சயம் வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்.