Nayagi Serial: கட்டிக்கறதும்... ஒட்டிக்கறதும்...பார்க்க சொல்றதும்...சீரியலுக்கும் சென்சார் தேவை!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியல் கடந்த ஒரு வாரமாகவே அடுத்தவங்க பெட்ரூமை எட்டிப் பார்க்கற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தி கூச்சப்பட வைக்குது.
புருஷன் பொண்டாட்டி இடையில சண்டையை மூட்டி விடறேன் பாருன்னு சவால் விடறதும்.. சண்டைக்கு அப்புறம் சமாதானத்துக்கு என் புருஷன் கொஞ்சுவார் பாருன்னு சொல்றதும்..
அதை வீடியோ கால் போட்டு பார்க்கறியாடின்னு கேட்கறதும்.. அநாகரீகத்தின் உச்சம்..
முழுக்க அடுத்தவள்
நாயகி சீரியல் முழுக்க அடுத்தவள் புருஷனுக்கு ஆசைப்படும் கதைதான். இதில் உச்சம் என்னவென்றால், அனன்யா ஒரு படி மேலே போயி, தான் ஆசைப்படும் திருவின் உயிரணுக்களை அவனுக்கு தெரியாமலே எடுத்து, தனது கரு முட்டையில் சேர்த்து ஒரு குழந்தையாக பெற்று எடுத்து வளர்ப்பதுதான்.
ரூம் போட்டு
திரு தனக்கு கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனையும் விடா முயற்சியாக அஸ்த்திரங்களை வீசி, அவனது குடும்பத்துக்கு தொந்திரவு கொடுத்து, அவனை அடைய நினைப்பது என்பது.. படு கேவலமாக இருக்கிறது. இது போல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரிப்பது என்பதை எப்படித்தான் ரூம் போட்டு யோசித்தார்களோ தெரியவில்லை.
சண்டை போடுவாண்டி
உன் புருஷன் உன் கூட சண்டை போடுவாண்டி என்று அனன்யா சொல்ல, சொன்னபடி திரு ஆனந்தியிடம் சண்டை போட... சண்டை போட்டபிறகு என் புருஷன் என்கிட்டே கொஞ்சுவாரு பாரு..அதை நீயும் பாருடின்னு சொல்லிட்டு ஐஸ் கிரீம் பார்லருக்கு போயிட்டு. வீடியோ கால் போட்டு ரெண்டு கண்ணை வச்சுக்கிட்டு பாருடீன்னு புருஷனை ஐஸ்கிரீம் ஊட்ட சொல்லி பார்க்க சொல்ல..
முடியலடா சாமி
வீட்டு வரவேற்பறையில் 8 மணிக்கு இந்த கூத்து நடந்தால்.. குடும்பத்தோட எப்படிங்க உட்கார்ந்து சாப்பிடுவது.. டிவி பார்ப்பது?தயவு செய்து டிவி சானல்களுக்கு ஒரு சென்சார் போர்டு வச்சு தொலைங்கப்பா! தாங்க முடியலை.. டிவி சீரியல்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதறவங்க பொம்பளைங்க இல்லேங்க...
என்னவோ பொம்பளைங்க இப்படித்தான் இருப்பாய்ங்கன்னு நீங்களா கற்பனை பன்னிப்பீங்களா?