ஆத்தாடி.. இந்த சகுந்தலா தேவி வேற மாதிரிங்க...!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரேவதி அமைதியான அழகான அம்மா. லாயர் சகுந்தலாதேவியா வர்ற காயத்ரி ஜெயராம் நேர்மையான வக்கீல்தான்.
ஆனா, மகன் கல்யாண விஷயத்துல டோட்டலா மாறிப் போறாங்க சுகுந்தலாதேவி. மகனோட திருட்டு கல்யாணத்துல அழகம்மை மகள் காவ்யாவாலதான் மதன் மனசு மாறி, அவளை கல்யாணல் செய்துக்க சம்மதிச்சான்னு பொய் பேசறாங்க.
மதன், நான்தாம்மா காவ்யா மேல ரொம்ப ஆசைப்பட்டேன். இன்னிக்கு கல்யாணம்னு அவளுக்கே தெரியாது. நான்தான் கல்யாணம் செய்துக்கலேன்னா தற்கொலை செய்துக்குறதா மிரட்டினேன். அப்புறம்தான் அவ ஒத்துக்கிட்டான்னு சொல்றான்.
மெல்ல வந்து மேலே விழ.. இடையைப் பிடித்து இழுத்து அணைத்த மச்சான்.. சொக்கிப் போன ஜனனி!
பிளான்
சரி, இந்த கோயில்ல ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலாம்.. பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்னு அப்போதைக்கு மகனை சமாதான படுத்திட்டு, பிறகு தன் கிரிமினல் வேலைகளை காட்டறாங்க சகுந்தலா தேவி. காவ்யாவுக்கும், மதனுக்கும் இடையில ஏதாவது சண்டை மூட்டி விடறது...ரேவதி குடும்பம் வீட்டுக்கு வந்தா ஜாடை பேசறது அப்பிடி இப்பிடின்னு சண்டையை மூட்டி விடறாங்க.
பத்திரிகையில்
கடைசியா பத்திரிகையில் கூட மதன் பேருக்கு பக்கத்துல காவ்யா பேர் வரக் கூடாதுன்னு, ஜவுளிக்கடைக்கு சங்கவியை அழைச்சுக்கிட்டு வர்றாங்க.சங்ககவி மதனுக்கு சகுந்தலாதேவி பார்த்த பொண்ணு. வேணும்னே சங்கவிகிட்ட, மதனோட ஒட்டி உறவாட சொல்ல , பார்த்த காவ்யா எரிச்சலாகி மதன் மீது கோபம் அதிகமாகிறது. சண்டையும் அதிகமாகுது.
ரெய்டு
காவ்யாவின் அண்ணன் இன்கம்டாக்ஸ் அதிகாரியை வேலை செய்யறதால, சகுந்தலாதேவி வீட்டுக்கு ரெய்டு போக நேரிட்டது., இதுதான் சாக்குன்னு புடிச்சுகிட்டு மதனை வெறுப்பேத்தறாங்க பெத்த அம்மா. மகன் எப்படி பிறகு இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான்.. உடனே கல்யாணம் கேன்சல்னு சொல்லி, சங்கவியை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்றான்.
மதனுக்கு
சங்கவிக்கும் மதனுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருது. கடைசியில் இன்கம் டாக்ஸ் ரெய்டு வந்ததுக்கே காரணம் சகுந்தலா தேவி வேணும்னே யாரோ மாதிரி போன் செய்ததுதான்னு மதனோட அப்பாவுக்கு மட்டும் சொல்றாங்க சகுந்தலா தேவி. ஒரு மகனோட ஆசை கல்யாணத்தை நிறுத்தறதுக்கு எந்த அளவுக்கும் போற சகுந்தலா தேவி வேற மாதிரிதாங்க.