பார்...முழுசா அருந்ததி பேயா மாறி இருக்கும் சண்முகத்தை பார்...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் கதை இப்போதுதான் சூடு பிடிக்க துவங்கி இருக்கு.
ஈஸ்வரி அம்மா உத்தரவுப் படி, குடும்பத்தினர் எல்லாரும் அருந்ததி பேயின் பிடியில் இருந்து தப்பிக்க ருத்திராட்ச காப்பு அணிந்திருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் முதற்கொண்டு அந்த காப்பை கையில் அணிந்திருக்க, சண்முகத்தின் காதலி சுலேகாவுக்கு மட்டும் அந்த காப்பு, இவங்க குடும்ப பாரம்பரியம் இதெல்லாம் பிடிக்கலை.
ஏன் ரோஜா உனக்கு இந்த விஷ பரீட்சை? லவ்வை சொல்றதுன்னா சொல்லிடலாம்ல...!
சுலேகா சண்முகம்
சுலேகா தான் உயிருக்கு உயிராய் காதலிச்ச சண்முகத்தை விட்டு அமெரிக்காவுக்கு கிளம்பி போயிடறா. சுலோகா பிரிவைத் தாங்காத சண்முகமும் தனக்கும் இந்த காப்பு தேவையில்லை என்று கழற்றி வீசிவிடறான்.
காப்பு டியூப்ளிகேட்
காப்பு இல்லாத சண்முகத்தின் உடலிலில் அருந்ததி புகுந்துடறா. காப்பு இல்லாமல் ஈஸ்வரி அம்மா கண்ணில் பட முடியாதே... உடனடியா பேய் சக்தியில டியூப்ளிகேட் காப்பு வரவழைச்சு போட்டுக்கறான். அவனின் நடை கூட பெண் மாதிரி மாறி விடுகிறது.
முதலில் வேலைக்காரனை
முதலில் வேலைக்காரனை தன் துஷ்ட சக்தியால் ஆட்டுவிக்கறான் சண்முகம். அவன் எனக்கு தேள் கொட்டுச்சு தேளை காணோம்...காபி ஆறி இருந்துச்சு..ஆனா காலில் சின்னய்யா கொட்டும்போது கொதிச்சுது. குழப்பமா இருக்கேன்னு சொல்றான்.
ஆட்டம் ஆரம்பம்
ஆட்டம் ஆரம்பம்னு சொல்லிட்டு சண்முகம் சிரிக்கறான்...ஆண் குரலும் கேட்கிறது...அந்த சிரிப்பில் பெண் குரலும் கேட்கிறது. இனி முழுசா அருந்ததியா மாறிட்ட சண்முகத்தை பார்க்கலாம்.