For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போ சண்முகம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்... தெய்வானை நோ சொல்றாளே...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் ரசிக்கும்படியா இருக்கு. அதே சமயம் திகில் சீரியல்னு சொல்றாங்க...

இந்த சீரியலில் திகில் கொஞ்சம் இல்லை... நிறையவே கம்மியாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் வேணும் வேணும்னு குழந்தைங்க கேட்கறாங்க.

அதே போல தமிழ் கடவுள் முருகனுக்கும் கதையில் முக்கியத்துவம் அதிகமா இருக்கலாம் என்று முருக பக்தர்கள் விருப்பம் தெரிவிக்கறாங்க.

பரந்த வயல்வெளி... தலையில வைக்கோல் கட்டு... இடுப்புல மண் பானை... ஆஹா... ஆஹா...!பரந்த வயல்வெளி... தலையில வைக்கோல் கட்டு... இடுப்புல மண் பானை... ஆஹா... ஆஹா...!

சண்முகத்துக்குள்

சண்முகத்துக்குள்

ஈஸ்வரி அம்மா பையன் சண்முகத்தின் உடலில் அருந்ததி பேய் புகுந்துகிட்டு, இப்போதுதான் வேலைக்காரனை ஆட்டுவிக்க துவங்கி இருக்கு .பாழடைந்த கிணத்துக்கு போயி, அங்கே இருக்கும் தண்ணீரை வெறித்தனமாக பார்க்கிறான் சண்முகம்.

குரலில் அருந்ததி

குரலில் அருந்ததி

கிணற்றின் அருகே நின்று அருந்ததி குரலில், ஈஸ்வரி உங்க குடும்பத்தின் ஒரு ஆணையும் விட்டு வைக்கமாட்டேன்.. உன் குடும்பத்து ஆண்கள்தான் என்னை கிணத்துல தள்ளினாங்கன்னு ஆவேசமா பேசுது.

சண்முகம் பேய் சிரிப்பு

சண்முகம் பேய் சிரிப்பு

பலத்த குரலில் சண்முகம் பேய் சிரிப்பு சிரிக்கறான்..கையில் காப்பு போட்டுக்கிட்டு, என்னை நெருங்க விடாம பண்றியா... இதோ இப்போ என்னை வீட்டுக்குள்ள வர விடாம பண்ண முடியாது ஈஸ்வரி.என் கையிலும் காப்பு இருக்கு.. இது டூப்ளிகேட் காப்புன்னு உன்னால கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லி சண்முகம் அருந்ததி குரலில் சிரிக்கறான்.

முக வாட்டத்தில் ஈஸ்வரி

முக வாட்டத்தில் ஈஸ்வரி

ஈஸ்வரி அம்மா மகனைப் பார்ப்பதைத் தவிர்த்து நிற்க...அம்மா கோவமாம்மா...என் முகத்தை பார்க்க மாட்றீங்கன்னு கேட்கறான் சண்முகம்.ஈஸ்வரி பேசாமல் நிற்க.. எப்படி பேசுவாங்க அண்ணி... நீதான் தெய்வானையை கல்யானம் கட்டிக்க சம்மதிக்கலையேன்னு சித்தப்பா சொல்றார்.

கட்டிக்கறேன்

கட்டிக்கறேன்

அம்மா..எனக்கு தெய்வானையை கல்யாணம் செய்துக்க சம்மதம்னு சொல்றான். உடனே ஈஸ்வரி சந்தோஷம் ஆகிடறாங்க. உடனே தெய்வானை வீட்டுக்கு போயி சண்முகம் சம்மதம் சொன்ன விஷயத்தை சொல்றாங்க

இந்த கல்யாணம்

இந்த கல்யாணம்

இந்த கல்யாணம் வேணாம்மா...எனக்கு பயமா இருக்கு.சுலேகாவை என்னால மறக்க முடியாதும்மா...அவ கூட எப்படி எல்லாம் வாழணும்னு நான் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்னு சண்முகம் உங்ககிட்ட சொன்னதை நான் கேட்டேன்மா...

முருகன் சம்மதம்

முருகன் சம்மதம்

நாளைக்கு என்னை விட்டுட்டு சுலேகாதான் வேணும்னு போக மாட்டார்னு என்ன நிச்சயம்னு கேட்கறா தெய்வானை.ஈஸ்வரி அம்மா அழுதுகிட்டே வெளியில வர்றாங்க ஆனா, சண்முகத்தை கல்யாணம் செய்துக்க முருகன் சம்மதம் தெரிவிச்சது ஒரு கதை.

English summary
Sun TV's Arundhati serial is pleasant. At the same time telling horror serial ...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X