சூப்பர் பிளவுஸ்.. எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே.. கிளுகிளு ரசிகர்கள்.. சரண்யாவின் நாணம்!
சென்னை: இவர்தான் நடிக்கப் போகிறார், அடுத்த முல்லை இவர்தான் என்றெல்லாம் சொன்னார்கள் .ஆனால் சரண்யா துராடி வழக்கம் போல அதில் நடிக்கவில்லை.
நடிக்காவிட்டாலும் கூட இன்ஸ்டாகிராமில் ரொம்பவே பிரபலமாகத்தான் இருக்கிறார் சரண்யா துராடி .விதம் விதமான காஸ்ட்யூடமில், மேக்கப்பில் இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு ரசிகர்கள் ரொம்பவே அதிகம்.
என்ன விசேஷம் என்றால் சரண்யாவே பல சூப்பரான கேப்ஷன்களைப் போட்டுக் கொடுத்து ரசிகர்களையும் சிந்திக்க வைத்து விடுவார்.
சூசன் உங்களோட.. திராட்சைக் கண்ணை மிஸ் பண்றோம்.. மறுபடியும் வாங்க
ரசிகர்களின் கண்மணி
ரசிகர்கள் மத்தியில் தனி கூட்டத்தையே வைத்திருப்பவர் சரண்யாதான் .இவர் கண்மணி என்றுதான் தனது ரசிகர்களை செல்லமாக கூப்பிடுவார் .அதேபோல அவர்களும் இவரைக் கண்மணி என்றுதான் செல்லம் கொஞ்சுவார்கள். ரசிகர்களை ரொம்பவே மதிப்பவர்தான் சரண்யா துராடி. இருவருக்கும் இடையிலான பிணைப்பு அப்படி ஒரு அன்பால் ஆனது.
முல்லையாக முடியாது
முல்லை என்ற கேரக்டரில் வாழ்ந்து விட்டுப் போன சித்ராவின் நெருங்கிய தோழிதான் நம்ம சரண்யா .இதனால்தான் முல்லை வேடத்தில் இவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் சரண்யாவே அதை மறுத்து விட்டார் .அதில் நான் நடிக்க முடியாது, சித்ரா வாழ்ந்து விட்டு போய் விட்டார் .அவரைத் தவிர வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது என்று கூறியிருந்தார்.
குத்து விளக்கு
சித்ராவின் மரண சோகத்திலிருந்து மீ ண்டுள்ள சரண்யா இப்போது வழக்கம் போல போஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார் .வழக்கம் போல கவர்ச்சியும் குடும்ப குத்து விளக்குமாய் கலந்து கட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் .ஒரு வித்தியாசமான ஜாக்கெட் போட்டு இவர் போட்டிருக்கும் போஸ்ட்தான் தாறுமாறாக வைரலாகியுள்ளது.
மறுபடி மறுபடி
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே. மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ. என்று ஆர்ட்டின் போட்டு ஒரு போஸ்ட் போட்டுள்ளார் .அதில் அவர் போட்டுள்ள பிளவுஸ் அழகில் பலரும் மயிங்கிக் கிறங்கி விட்டனர் .எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே என்று ஒரு ரசிகர் வந்து உத்துப் பார்த்து விட்டு கிறக்கமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார். அந்த அளவுக்கு ஜாக்கெட் கொஞ்சம் இறக்கமாகத்தான் இருக்கு.
எல்லோருக்கும் 2 சாய்ஸ்
அதேபோல இன்னொரு போஸ்ட்டில், எல்லோர் வாழ்க்கையிலயும் கஷ்டம் இதுக்கு.ஆனா நமக்கு முன்னாடி ரெண்டு வாய்ப்புகள் இருக்கு. 1. ஒன்னு வாழ்க்கையை பற்றி கவலைபட்டு இருக்கும் வாழ்க்கையின் நிம்மதியை தொலைப்பது. 2. என்ன நடந்தாலும் பாத்துகலாம்னு கஷ்டங்களை சிரிச்சுட்டே கடந்துடுறது. 2020ல் 2வது ஆப்ஷன் தேர்ந்தெடுத்த கண்மணிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் எ ன்று வாழ்த்து சொல்லியுள்ளார் சரண்யா.
கிறங்கடிக்கும் பிளவுஸ்
அதே மாதிரி இன்னொரு பிளவுஸ் போட்டாவிலும் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார் சரண்யா. சிவப்பு கலரில் படு வித்தியாசமாக இருக்கிறது அந்த பிளவுஸும். அதைப் போட்டுக் கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் சரண்யா. அதைப் பார்த்த பலரும் பாத்தும்மா பிளவுஸ் கழன்று விடப் போகுது என்று ஜாலியாக கலாய்த்துள்ளனர். மொத்தத்தில் சரண்யா மீண்டும் பார்முக்கு வந்து விட்டார் போல.