கும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு பாப்புலரான ஷிவானியை அவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்தனர் .
தற்போது மீண்டும் ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக விட்ட இடத்திற்கு வந்ததும் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள்.
ஷிவானி விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்னரே இன்ஸ்டாகிராம் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பாப்புலரான நபராக இருந்ததால்தான் அவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்ததாம்.
இன்ஸ்டா ராணி
அதுபோலதான் இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை அறிந்து விஜய் டிவி பிக் பாஸில் கலந்துகொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு அளித்தது. இவ்வளவு நாட்கள் இவர் தாக்கு பிடிப்பார் என்று பலர் எதிர்பார்க்காத நிலையில் அவருடைய ரசிகர்கள் அவரை கடைசி வாரம் வரைக்கும் கூட்டி சென்றிருக்கிறார்கள்.
நாலு மணிக்கு ஷிவானி
நேரத்திற்கு எது நடக்குதோ நடக்கலையே நாலு மணிக்கு இன்ஸ்டாகிராமில் தினமும் புது போஸ்ட் போட்டு இன்ஸ்டா ரசிகர்களின் செல்ல தலைவியாக இருந்த ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போதே அவருடைய ரசிகர்கள் ரொம்பவும் அப்செட் ஆகி விட்டார்கள் .தினமும் நாலு மணிக்கு யார் போஸ்ட் போடுவார் என்று குழந்தையாக கேள்வி கேட்டு வந்தனர் .
அட்மின் போட்ட போட்டோஸ்
அவர்கள் ஏக்கத்திற்காக சில போட்டோக்களை ஷிவானி எடுத்து அவரது அட்மின் இடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் .அதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகும் போஸ்ட் அப்லோட் பண்ணி கொண்டிருந்தார். அதுமட்டுமா பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் பாலாஜி பின்னாடி சுத்தி கொண்டிருந்ததை பார்த்து கொண்டும் பல ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை போட்டு வந்தனர் .
கலாய்த்த ரசிகர்கள்
பலர் மீம்ஸ் போட்டு கலைத்தாலும் ரசிகர்கள் உண்மையிலே இவரை தேடிக் கொண்டும் இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் அவர் தனது கவனத்தை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் காட்ட ஆரம்பித்து விட்டார் .அடுத்த டார்கெட் பெரிய கதாநாயகியாக வரவேண்டும் என்பதுதான் இவரது டார்கெட் .
அடுத்தடுத்து போஸ்ட்
அதனால் மீண்டும் விட்ட இடத்திற்கே வந்து தனது திறமையை காட்ட ஆரம்பித்து விட்டார். இவர் மீண்டும் இன்ஸ்டா வந்ததும் இவருடைய ரசிகர்கள் அதிகமாக அதிகரிக்க தொடங்கி விட்டார்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வரும் இவருக்கு போஸ்ட் போட்டா 10 நிமிடங்களுக்குள் கமெண்டுகள் மலைபோல உயர ஆரம்பித்திருக்கிறது.
செம கூட்டம்
அதுமட்டுமல்ல லைக்களும் பிச்சிக்கிட்டு போய்கிட்டு இருக்கு .பலர் இவருக்காக கமெண்ட் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவருடைய ரசிகர்களும் ஹேட்டர்ஸ்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இவர் கமெண்டுகளை படித்துவிட்டு அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்.