என்னது ஷிவானி நாராயணன் இப்படி மாறி விட்டார்.. ஸோ லவ்லி!
சென்னை: ஷிவானி நாராயணன் எப்படி க்யூட்டாக மாறி விட்டார் என்பதுதான் இன்ஸ்டாகிராமில் இப்போது பரபரப்பு பேச்சு. காரணம் 2016ல் தான் எப்படி இருந்தேன்.. இப்போ எப்படி இருக்கேன் என்பதை படம் போட்டு அத்தனை பேரையும் உசுப்பேத்தி விட்டார் ஷிவானி.
லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து இப்ப வரைக்கும் இணையதளத்தில் பிரபலங்கள் எல்லாம் வீட்டிலிருந்து போட்டோ ஷூட் பண்ணி இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள் அதற்கு ஷிவானி நாராயணனும் விதிவிலக்கல்ல.
கொஞ்ச காலமா சீரியல் நடிகர்கள் நடிகைகள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் எல்லாரும் இணையதளங்களில் புகைப்படங்களை அள்ளி விட்டு வருகிறார்கள்.
அழகுக்கு நிகர் அழகு நீயே வந்தனா.. உருகும் ரசிகர்கள்.. வாஸ்தவம்தானே!
சூடேற்றும் போட்டோஸ்
அப்படிதான் தன்னை விதவிதமாக போட்டோ எடுத்து ஷிவானியும் அப்லோட் பண்ணி இருக்கிறார். அவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சூடேறி போய் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டு. ம் அந்த அளவிற்கு இருக்கிறது போட்டோஸ்கள்.. ஷிவானி பகல் நிலவு என்னும் சீரியலில் நடித்து பிரபலமானவர்.
அழகிய மாடல்
ஆரம்பத்தில் இவர் ஒரு மாடலாக தான் முதலில் நடித்துக்கொண்டிருந்தார். 16 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வயதிலேயே அவருக்கு அவ்வளவு நடிப்பு திறமையா என்று ரசிகர்கள் வாய்விட்டு கூறுமளவிற்கு அவருடைய நடிப்பு அழகாக இருந்தது. அதுபோக மாடலிங்கில் கலக்கிவிட்டு பிராண்டட் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
அது பேஷன்
நகர அளவிலான அழகுப் போட்டிகள் மற்றும் பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி சீசன் 3 இல் காயத்ரி ஆக நடித்திருப்பார். அவர் நடித்த சீரியல்களில் எல்லாத்திலும் அவர் ஹோம்லியாக நடித்திருப்பார். இப்போ இன்ஸ்டாகிராமில் முன்னணி ஹீரோயின்களுக்கு போட்டியாக கவர்ச்சியாகவும் போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார்.
2016 போட்டோ
அவருடைய போட்டோக்களை நெட்டிசன்கள் பார்த்து கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். 2016 க்கும் 2020 க்கும் உள்ள வித்தியாசமான ஒரு புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து எல்லோரும் வாயை பிறக்கிறார்கள். அவரா இவர் என்று கூறுமளவிற்கு மாறியிருக்கிறார். அத்தோடு, இப்போ ரீசண்டா க ஒரு போட்டோ அப்லோட் பண்ணி இருக்கார். பச்சை கலர்ல ஒரு ஆப் டவுசரில் அவர் காட்சி தர, அதைப்பார்த்து நெட்டிசன்கள் ஏன்மா இப்படி எங்களுக்கு வெறியேத்தறீங்க.... அப்படின்னு கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள்.