அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும்.. ஷிவானிக்கே வெட்கம் வரும்ய்யா இதைப் படிச்சா!
சென்னை: அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே.. அமுதே... அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே.. எப்படி இருக்கிறது கவிதை.. ஷிவானி நாராயணன் போட்ட போட்டோவைப் பார்த்து ரசிகர் ஒருவர் தீட்டிய கவிதைதான் இது.
Recommended Video
இணையதளத்தை கதிகலங்க வைத்திருக்கும் ஷிவானி தற்போது ரசிகர்களை வேர்த்து விறுவிறுக்க வைத்திருக்கிறார். அவர் நாளுக்குநாள் போடும் போட்டோக்களைப் பார்த்து கொரோனா பீதியிலும் கூட குதூகலமாக இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், மேலாடை போட்டிருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு அவர் ஸ்கின் கலரில் ஒரு டிரஸ்சை போட்டு போட்டோ எடுத்து விருந்து வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்துக் கொண்டுள்ளனர். கவிதைகளும் பீறிட்டுக் கிளம்பிக் கொண்டுள்ளன.
கிளாஸை கட் அடித்து விட்டு
இவர் லெவன்த் படிக்கும்போது நடிக்க வந்தாலும் இரண்டு வருடங்களில் சீரியலில் கிடைக்காத ரசிகர்கள் கூட்டம் இணையதளம் மூலமாக அவருக்கு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் சீரியலில் இருந்து கூட விலகிவிட்டார் .ஆனால் தற்போது இணையதளங்களில் நாளுக்குநாள் செய்யும் அட்ராசிட்டி அதிகரித்துக்கொண்டே போகுது. இது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் டப்ஸ்மாஷ்
முதன் முதலில் அவர் டப்ஸ்மாஷ் வீடியோக்களில் கலக்கி கொண்டிருந்ததால் வீடியோக்களில் இவரை பார்த்த இயக்குனர் ஆடிஷனில் கலந்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார். இவரும் போய் கலந்து கொண்டதும் இவர் செலக்ட் ஆகி இருக்கிறார் .அதனைத் தொடர்ந்துதான் பகல் நிலவு சீரியல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நடிப்பை பற்றி எதுவும் தெரியாமல் முதன்முதலில் சீரியலில் நடிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டாராம்.
ஒரு ரவுண்டு அடிச்சாச்சு
அதுவும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என்கிறபோது ஸ்கூலை கட் அடித்துவிட்டு தான் நடிப்பதற்கு போய்க்கொண்டிருக்கிறார். இவர் ஆசிரியர்களும் நல்ல சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். அதனால்தான் இவரால் ஸ்கூல் லைஃப் நன்றாக முடிந்ததாம். சீரியலில் நடிக்கத் தெரியாமல் நடிக்க போயிருந்தாலும் அதிலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். இப்போது இணையதளங்களில் படு கவர்ச்சியாகவும் கலக்கி வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கல்
இவர் ஸ்கூல் படிக்கிற பொண்ணு என்பதையே பலரால் நம்ப முடியாத அளவிற்கு பேரழகும், கவர்ச்சியும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. மாடல் உடையில் கலக்கிக் கொண்டிருந்த இவர் கேரளா சாரி யில் சமீபத்தில் ஹோம்லியாக கலக்கியிருந்தார் .இவரை மாடர்ன் உடையில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவரின் இந்த புடவை அலங்காரமும் ரொம்பவும் பிடித்துப் போய் புளகாங்கிதமடைந்திருந்தனர்.
கேரளத்து சேலையில் கிறக்கம்
சேலையில் ரசித்த அடுத்தநாளே ரசிகர்களுக்காக கவர்ச்சிகரமான போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். ஸ்கின் கலரில் போட்டிருக்கும் உள்ளாடையோடு போட்டோ இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். நாளுக்குநாள் இவருக்கு கவர்ச்சி கூடி கொண்டு போவதால் பல ரசிகர்கள் இவருக்கு ரசிகர்கள் மன்றத்தையே உருவாக்கி விடுவார்கள் போல.
ஆறாக ஓடும் கவிதை
இவர் போட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு ஏகப்பட்ட கவிதைகளும் கூட பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் அந்த அளவுக்கு லயித்துப் போய் விட்டனர் போலும்.. இப்போது ஷிவானியை பிக் பாஸ் 4வது சீசனில் கலந்து கொள்வதற்கு கூப்பிட்டாக என்றும் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். ஓவியா ரேஞ்சுக்கு இப்போதே இவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஷிவானி அதுகுறித்து ஏதும் கூறாமல் கமுக்கமாக இருக்கிறார்.