Minnale serial: ரடான் தயாரிப்பில் இப்படி ஒரு டயலாக்கா?
சென்னை: நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரடானில் இப்போது ஒரே ஒரு சீரியல் மட்டும்தான் சன் டிவிக்கு தயாரித்து தருகிறார்கள்.
பகலில் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியல்தான் அது. அதில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். நிரோஷாவை போலீசார் கைது செய்ய வருகிறார்கள்.
அப்போது எதுக்கு என்னை கைது செய்கிறீர்கள் என்று கேட்கும்போது, எதுக்குன்னு சொன்னாதான் வருவீர்களா என்று போலீசார் கேட்கிறார்கள்.
ராதிகா சன் டிவி
நடிகை ராதிகா சன் டிவிக்கு லட்டு மாதிரி சீரியல்களை கொடுத்தவர். தங்க வேட்டை, கோடீஸ்வரன் போன்ற பல அருமையான நிகழ்ச்சிகளை கொடுத்தவர். அவரின் சந்திரகுமாரி சீரியல் அவருக்கு ஏனோ கை கொடுக்கவில்லை.
Rasathi Serial: தேவயானி நல்லாருக்காங்க... யாருக்குமே வெயிட் இல்லை!
சந்திரகுமாரி நேரம்
சந்திரகுமாரி நேரம் மாற்றம் செய்த நிலையில் அந்த சீரியலில் கதைப்படி ராதிகா காணாமல் போனார். ராதிகா இதோ வருவார் அதோ வருவார் என்று சீரியல் ஆர்வலர்கள் காத்திருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொண்ட ராதிகா தனக்கு பதில் விஜி சந்திர சேகரை நடிக்க வைத்தார். பின்னர் சீரியலையும் மிக விரைவில் முடித்துக் கொண்டார்.
இன்றுவரை மின்னலே
அப்படி இருந்தும் சன் டிவியில் மதிய நேரத்தில் ரடான் தயாரிப்பில் உருவாகி ஒளிபரப்பாகி வரும் மின்னலே சீரியல் ஒரு தடையும் இன்றி ஒளிபரப்பாகித்தான் வருகிறது. இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
கவனமின்மை காரணமா
ரடான் தயாரிப்பில் ராதிகாதான் கிரியேட்டிவ் ஹெட் என்று டைட்டில் கார்டில் போடப்படும். இப்போது டைட்டில் போடப்படுவதில்லை,. இதில் நிரோஷாவை கைது செய்யும்போது ஒரு டயலாக் வருகிறது. நிரோஷா நான் எந்த தவறும் செய்யவில்லையே என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேட்பார்.
இது கூட தெரிந்து
ஏன் எதுக்குன்னு காரணம் சொன்னால்தான் வருவீர்களா என்று ஒரு போலீஸ்காரர் கேட்கிறார். வீட்டில் சும்மா நின்று கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியை எதுவும் சொல்லாமல் ஒரு போலீஸ்கரர் அரெஸ்ட் என்று சொன்னால் காரணம் கேட்க மாட்டார்களா? காரணம் சொல்வது ஒரு போலீஸ்காரரின் கடமை இல்லையா? இது கூட வசனம் எழுதுபவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றால் என்ன சொல்வது?