Chithi Serial: சித்தி... சிங்கிள் சீன்தான்... சூப்பரா எடுத்து இருக்காங்க...!
சென்னை: சித்தி முதல் சீசன் சன் டிவியில் இரவு 9 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் சித்தி.
கோவிட் 19 தொற்று காரணத்தினால் லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு சித்தி சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது சன் டிவி.
சித்தி என்று சாராதவாக நடிக்கும் ராதிகாவை அழைக்கும் சிறுமி காவேரி, அவருக்கு மாற்றுப் புடவை எடுத்து வந்து தரும் காட்சியை அருமையாக அதே சமயம் சிம்பிளாக ஷூட் செய்து இருக்கிறார்கள்.
காவிரியில் கிடைத்த சித்தி
உனக்கு சித்தி வருவாங்க.. சித்தி கிடைப்பாங்க என்று கிருஷ்ணா சொல்ல, அதே மாதிரி காவிரி ஆற்றில் முங்கி எழும்போது ராதிகா சிறுமி காவேரி கையில் கிடைக்கறாங்க. உடனே சித்தி கிடைச்சுட்டாங்க என்று காவேரி சித்தியை முத்தமிட்டு, அப்பா சித்திப்பா.. சித்தி கிடைச்சுட்டாங்க என்று தலைமுடியை ஒதுக்கி விடும் காட்சி நன்றாக இருந்தது.
மாற்றுப் புடவை
சாரதாவை வீட்டுக்கு அழைத்துப் போக முடியாமல் சிவகுமார் விட்டு விட்டு சென்றுவிட, அவருக்கு மாற்றுப் புடவை வேண்டும் என்று சிறுமி காவேரி தனது அம்மா புடவையை எடுத்து வருகிறாள். ஆனால், யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கும் ராதிகா சிறுமியிடமும் பேசவில்லை.
புடவை சித்தி
சித்தி உஙக்ளுக்கு மாற்று புடவை எடுத்து வந்திருக்கேன் என்று காவேரி சொல்வதில் ஆரம்பிக்கும் ஒரு காட்சி சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் செல்கிறது. கேமிரவை ஒரே ஆங்கிளில் வைத்து அருமையாக இந்த காட்சியை ஷூட் செய்து இருக்கிறார்கள். மிக எளிமையாக தேவையான வசனங்கள் மட்டுமே இந்த காட்சியில் இருக்கிறது.
க்ளோசப் இல்லை
புடவை கொண்டு வரும் காவேரி தனது பேச்சு செயல்களின் மூலம் சித்தியை புடவையை வாங்கிக்கொள்ள செய்ய வேண்டும். அதற்கான வசனங்கள் மட்டுமே இருக்கிறது. க்ளோசப் காட்சி இல்லை. சிறுமியின் பேச்சு... நடிப்பில் மனம் தளர்ந்த சித்தி புடவையை வாங்கிக்கொள்ளும் அந்த சீன் சிங்கிள் சீன்தான் .. அருமையாக எடுத்து இருக்கிறார்கள்.