ஸோ சுவீட் ராசாத்தி குடும்பம்னு சொல்ல வைக்கிறாங்க!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில், அந்த டிவியின் புது சீரியலான ராசாத்தி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்றுவிட்டார்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அஸாரும், பார்வதியும்.
இதெல்லாம் ஒரு சீரியல் ப்ரோமோஷன் யுக்திதான் என்றாலும், நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முதலாக சின்னத்திரைக்கு இந்த சீரியல் மூலம் நடிக்க வந்துள்ளார்.
நடிகைகள் விசித்திரா, சுலக்ஷனா, என்னுயிர்த் தோழன் தென்னவன், மிக முக்கிய அம்சமாக நாட்டாமை நடிகர் விஜயகுமார் என்று இந்த சீரியலுக்கு ஸ்ட்ராங் காஸ்ட் நடிகர் நடிகைகள் ஏராளம்.
இயக்குநர் ராஜ்கபூர்
இயக்குநர் ராஜ்கபூர் சின்னத்திரையில் ஒரு சினிமா கொடுப்பவர் என்று, அவருக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது. பிரமாண்டமான பொருள் செலவில் கதைக்கு தேவையான அம்சங்களை மட்டுமே எடுப்பதில் வல்லவர். ராசாத்தி சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர். அந்த வகையில் ராசாத்தி சீரியலின் மேல் மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
Eeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா?
விசித்திரா சுலக்ஷனா
நானும், செந்தில் அண்ணனும் ஒரே படத்தில்தான் அறிமுகம் ஆனோம் என்று சொன்னார்.. அப்படிப் பார்க்கையில் நடிகை சுலக்ஷனா,இயக்குநர் பாக்கியராஜின் தூரல் நின்னு போச்சு படத்தில் அறிமுகம். இதில் செந்திலும் விக் எதுவும் வைக்காமல் மிகச் சாதாரணமாக எளிமையான தோற்றத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி நடித்திருப்பார்.
நடிகர் தென்னவன்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் படம், ஒரு அரசியல்வாதி, அந்த கட்சியின் தீவிர தொண்டன் பற்றிய படம்.மிக அருமையாகப் படத்தை எடுத்து இருப்பார் . தென்னவன் நடிகை ராமாவை காதிப்பது போல நடித்து அரசியல்வாதியாகவும், நடிகை ரமாவுக்கு அடைக்கலம் தந்தவர் கட்சியின் தொண்டர் என்பது போலவும் கதை செல்லும்.
இசைஞானி பாடல்
நடிகர் தென்னவனுக்கு என்று இசைஞானி இளையராஜா இசை அமைத்த பாடல், மாபெரும் ஹிட்.. ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா..அடியேய் சீமாட்டி பூச்சூட்டி வாவாவா என்கிற அந்த பாடலை நினைவு கூர்ந்த தென்னவன், இப்போது அதிகமாக வில்லன் வேடங்களே ஏற்று நடிக்கிறார். சின்னத் திரைக்கு முதன் முதலாக வந்திருக்கும் இவர் ராசாத்தி என்கிற தனது பாடலுக்கு ஏற்றபடி ராசாத்தி சீரியலில் நடிப்பது சந்தோசம் என்று கூறினார்.