மெதுவா... இதமா... ரோஜா.. வழுக்கி ரவி மேல விழறா பாக்கியலட்சுமி!
சென்னை: சன் டிவியின் ரோஜா, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சங்கமம் ஆனாலும் ஆச்சு..ரொமான்ஸும் ரெட்டிப்பா இருக்கு.
கிணத்தடியில குளிச்சுகிட்டு இருந்த அர்ஜுனுக்கு ரோஜா சீரியலின் ரோஜா, அவனுக்கு தெரியாம பின்னாலே போயி சோப்பை இதமா தேய்ச்சு விடறா.
அதுவரை வேலைக்காரன் தன் சொர சொரப்பான கையால தேய்ச்சு விட்டுகிட்டு இருக்க, என்னய்யா திடீர்னு உன் கை ரோஜா பூ மாதிரி ஆயிருச்சுன்னு கேட்கறான். உங்க முதுகுல இவ்ளோ நேரம் தேய்ச்சு கிட்டு இருந்தேன்ல..அதாங்கன்னு சொல்றான்.
ரோஜா.. லட்சுமி ஸ்டோர்ஸ்... ஆடு பகை, குட்டிகள் உறவா?
இப்படி
அடிக்கடி இப்படி நடக்க ..ஒரு கட்டத்துல கழுத்துக்கிட்ட வந்த ரோஜா கையை பிடிச்சு இழுத்துடறான் அர்ஜுன். ரோஜா வெட்கப்பட்டு நிற்க,அவளை தன்னருகில் இழுக்கறான் அர்ஜுன். உடனே அவனை தள்ளிவிட்டு வெட்கத்துடன் ஓடிடறா ரோஜா.
ரவியின் பிடியில்
லட்சுமி ஸ்டோர்ஸ் பாக்கிய லட்சுமி ரவி குளிக்கறதை பார்த்துட்டு அங்கே வர, ரவி கிரிக்கெட் பால் போல சோப்பைத் தூக்கிப்போட்டு விளையாடறான். அந்த சோப்பில் கால் வச்சு,வழுக்கிகிட்டே வந்த பாக்கிய லட்சுமியை, தாங்கிப் பிடிக்கறான் ரவி.
பஞ்சு பார்வை
ரவியின் ஈர உடலில் படர்ந்திருந்த பஞ்சு மிட்டாய் பாக்கியலட்சுமி அவனையே பார்க்க,ரவியும் அவளையே பார்க்க இருவரும் மெய் மறந்து நிக்கறாங்க. அங்கே யதேச்சையா வந்த டாக்டர் உமா இவங்க ரெண்டு பேரையும் பார்த்துடறாங்க. பக்கெட்டை தூக்கி வீச, ரெண்டு பேரும் சுய நினைவுக்கு வர்றாங்க. பாக்கியலட்சுமியின் கையைப் பிடிச்சு இழுத்துட்டு போறாங்க உமா.
இல்லை
கட்டிக்கிட்டு கிணத்தடியில நிக்கறாங்கன்னு தன் குடும்பத்து ஆளுங்ககிட்ட சொல்ல, யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. பாக்கியலட்சுமியும் சோப்பு வழுக்கித்தான் விழுந்தேன்னு சொல்றா.
மெய் மறந்து..
ரெண்டு பேரும் கட்டிகிட்டு ரொமான்ஸில் இருந்தது உண்மைதான்..ஆனாலும்,பாக்கியலட்சுமி பொய் சொல்றா...சோப்பு வழுக்கி ரவி மேல விழுந்தேன்னு சொல்ல, நான் பிடிக்கலேன்னா பாக்கியலட்சுமி கிணத்துல விழுந்திருப்பான்னு ரவியும் சொல்லறான்.
தீ மிதிக்கறது?
நான் என்ன சொன்னா நீங்க நம்புவீங்கன்னு பாக்கியலட்சுமி உமாகிட்ட கேட்க, நீ திருவிழாவுல தீ மிதிக்கணும்னு உமா சொல்றா. சரி நான் தீ மிதிக்கறேன்னு பாக்கியலட்சுமியும் சொல்றா.
எப்படி இயக்குநரே
எப்படி இயக்குநரே... ரவியும்,பாக்கியலட்சுமியும் காதலிப்பதும், என்னதான் சோப்புல கால் வச்சு வழுக்கி ரவி மேல விழுந்தாலும் ஈர உடலில் ரெண்டு பேரும் காதலில் மெய் மறந்து நின்னதும் உண்மைதானே...