Kanmani Serial: சவுண்டுக்கு கண்ணீர் பெருகி பெருகி வருதே!
சென்னை: கண்மணி சீரியலில் கண்ணனாக நடிக்கும் சஞ்ஜீவ்க்கு ஏற்ற மாதிரி, சவுந்தர்யாவாக நடிக்கும் நடிகைக்கும் கண்ணீர் பெருகி பெருகி வருகிறது.
சீரியல் நடிகைகள் பெரும்பாலும் அழும் காட்சிகளில் கண்ணீர் வராமல் சும்மாவேணும் கண்ணீரைத் துடைத்து துடைத்து சீன் போடுவது என்பது மட்டும்தான் காண முடிகிறது.
உணர்ச்சி பெருக்கோடு அழுவது என்பது காட்சிகளில் இருப்பது இல்லை.
கண்மணி சீரியல்
சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் உணர்ச்சி பெருக்கோடு தேம்பித் தேம்பி அழுவது, அழுதபடி வசனம் பேசுவது என்று பார்ப்பவர்களையும் கலங்க வைத்து தன்வசம் இழுத்து விடுவார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையும் இப்போது அவருக்கு ஏற்றபடி கண்ணீர் பெருக்கெடுக்க அழுவதும், தழுதழுக்க வசனம் பேசி நடிப்பது காட்சிக்கு உயிரோட்டமாக இருக்கிறது.
குழந்தை இல்லை
குழந்தை இல்லாத குறை போன்ற காட்சிகளில் உயிரோட்டமாக நடிப்பது என்பது, காட்சிக்குத் தேவையான ஒன்று என்பதால், இதில் சவுண்டு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து இருக்கும் நடிகையை பாராட்டத்தான் வேண்டும். கண்ணீர் பெருகி பெருகி வர சஞ்ஜீவ்க்கு நிகராக நடிகை நன்றாக நடித்து இருக்கார்.
கால நேரத்துக்கு
கதிரேசன் குழந்தை இல்லை என்று கண்ணனை சுட்டிக் காட்டி பேசுவதும், கடைசி காலத்தில் அனாதை பிணமாகப் போவான் என்று கண்ணனின் அக்காவிடமே பேசுவதும் சரிதான்.. அவன் கதாபாத்திரம் அப்படித்தான் சரி.. ஓகே.. கண்ணனே போயிருவானாம்.. அவன் அக்கா கதிரேசனிடம் வந்து நிற்பாங்களாமே... அக்காவுக்கு வயசாகாதா?
சவுண்டு சின்னவர்
மொத்தத்தில் சவுண்டு சின்னவருக்கு நடிப்பை காண்பிக்க நல்லதொரு வாய்ப்பாக கண்மணி சீரியல் நன்றாக அமைந்து இருக்கிறது. இருவருமே பொருத்தமான ஜோடியா இருந்தாலும், என்ன குழந்தை இல்லேன்னு எப்போதும் அழுது தீர்க்கறாய்ங்க.. பார்க்க என்னவோ போலத்தான் இருக்கு.