அழகு ரோஜா.. கிரேஸ் நதியா.. ஆனால் கதை பாதியிலேயே நிக்குதுப்பா...!
சென்னை: சன்டிவியின் ரோஜா சீரியல் சரிகமப தயாரிப்பு . ஒரு திரைப்படம் போல ரொம்ப செலவு செய்து ஷூட்டிங் செய்திருந்தாலும், பார்க்க குளிர்ச்சியா இருக்கு.
இதைத்தான் சமீப காலமா சன் டிவி தங்களுடைய ஸ்லாட்டில் சீரியல் தயாரிப்பவர்களிடமும் எதிர்பார்க்கிறது.இதுல இயக்குநர் திருமுருகன் விதிவிலக்குன்னு சொல்லலாம்.
எளிமையான ஷூட்டிங்கினாலும், கதையில் நல்ல பரபரப்பு குடுத்துருவார்.டெல்லி, சிங்கப்பூர்னு போனாலும், காட்சி அமைப்புகள் மட்டும் எப்போதும் எளிமையாகவே இருக்கும்.
ரோஜா
ரோஜா சீரியலின் நாயகி ரோஜா அழகு.. அவருடன் ஜோடியாக நடிக்கும் அர்ஜுனும் அழகுதான். இருவருடைய காதல் கதையை தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு விசாரிக்கறாங்க நதியா.
ஒரே கதை
இருவரும் ஒரே கதையை சொன்னா நிச்சயமா காதலிச்சுதான் கல்யாணம் செய்துருக்காங்கன்னு நம்பலாம்னு நதியா சொல்றாங்க. அர்ஜுன் அம்மா கல்பனாவும் ஒத்துக்கொள்ள கதை கேட்பது ஆரம்பிக்குது.
காதல்
நதியாவிடம் தனது காதல் கதையை ரோஜா சொல்லும்போது, ஒளிப்பதிவாளர் காட்சியை ஒளிப்பதிவு செய்ய ரொம்ப மெனெக்கட்டு இருக்கார்.படத்துல ஹீரோயின், ஹீரோ காதல் காட்சியைப் பார்ப்பது போல குளிர்ச்சியா இருக்கு.
வந்ததில்
நதியா வந்ததில் ரோஜா அர்ஜூனுக்குத்தான் நிறைய லொக்கேஷன்ல ஷூட்டிங் நடத்தி இருக்காங்க. ஆனா, நதியாவுக்கு வீடு மட்டும்தான்..நதியா சீரியலுக்குள் நுழைந்ததில் இருந்து அர்ஜுன், ரோஜா இருவரிடையே காதல், கல்யாணம் நடந்தது உண்மையா என்கிற கண்டு பிடிப்பில் இருக்காங்க.
அர்ஜுன்
ரோஜா சீரியல் சரிகம நிறுவன தயாரிப்பு.. சோ, ரோஜா, அர்ஜுன் சொல்லும் கற்பனை காதல் காட்சிகளை தங்கள் ரைட்ஸ் வாங்கிய படங்களில் இருந்து பல பாடல்களை சேர்த்து காட்சி அமைத்து இருக்காங்க... பார்க்க நல்லாத்தான் இருக்கு.