பாலாவை நினைத்து நினைத்து டெய்லி உருகும் சுசி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல தான் நடிகர் நடிகர்களிடமும் பிக் பாஸுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு சில நடிகைகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த மாதிரி தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த வீட்டிற்குள் இருந்து மூன்று வாரத்திற்குள் வெளியே வந்தாலும் சுசித்ரா ஒரு காரியம் செய்து வருகிறார்.
அந்த வீட்டிற்குள் இருந்த பாலாவிற்கு எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.
சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 8... "அஞ்சு ரூவா நோட்டு"
பாலாவுக்கு விசிறி
சுசித்ரா இந்த வீட்டிற்குள் என்ட்ரி ஆன முதல் நாளே நான் பாலாவின் பெரிய ஃபேன் என்றுதான் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டிற்குள் அவர் இருந்தவரைக்கும் அடிக்கடி எப்போதுமே பாலாவுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தார் .
பாலா சுச்சி மோதல்
ஆனால் சில நேரங்களில் சில போட்டிகளில் இவருக்கும் பாலாவிற்கும் அடிக்கடி தகராறுகள் வந்தாலும் எப்போதுமே பாலாவிற்கு பக்கபலமாகவும் துணையாக வந்து இருந்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பாலா மற்றும் ஆரி அனிதாவையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று அவர்களுக்கும் சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்.
பாலாவை நினைத்து
ஆனால் இந்த வீட்டை விட்டு இவர் மூன்று வாரத்திற்குள் வெளியே வந்த பிறகு அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தார் . இந்த நிலையில் இந்த வாரம் பாலா தானே எழுதி பாடிய ஒரு பாடல் ஒன்றை கம்போஸ் பண்ணி வெளியிட்டிருக்கிறார்.
பாலா மீது பாசம்
அந்த பாடல் பாலா பாலா என்று அவருக்காக பாலா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த பாட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டதும் பாலாவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுச்சி ரசிகர்கள்
அதுவுமில்லாமல் சுசித்ராவின் ரசிகர்கள் கூட இந்த வீட்டிற்குள் இருக்கும் போது பாலா எந்த அளவிற்கு உங்களை கேவலப்படுத்தினார். ஆனால் நீங்கள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவருக்காக பாலா பாலா என்று இப்படி பாட்டு எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கலாய்த்து வருகிறார்கள் .
நல்லா சுத்துனீங்களே
அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தான் பாலா பின்னாடி சுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் கூட அவரது புராணம்தான் பாடிக் கொண்டிருக்கிறீர்களா என்றும் வறுத்து எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத சுசித்ரா பாலாவிற்குகாக ஒவ்வொரு வாரமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
அவரிடம் இருக்கு
அதில் அவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் திறமையான நபர் என்று பாலாவை புகழ்ந்து தள்ளுவதை விடுவதில்லை இருந்தாலும் பாலா இதுவரைக்கும் சுசித்ராவை கண்டுகொண்டதே இல்லை. இதனால் தான் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது சுசித்ராவிற்கும் சிவானிக்கும் சண்டை என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் இவர் இண்ணமும் பாலாவின் புராணத்தை தான் பாடிக் கொண்டிருக்கிறார்.