என்னாது முருகப் பெருமானை பொண்ணுங்க சைட் அடிக்கறாங்களா?... கலிகாலம்...!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் விநாயகர் சீரியலில் முழுக்க முழுக்க பக்தி பரவசம் பரவி கிடக்கு. சுத்த தமிழில் பேசுவது காதுக்கு ரொம்ப இதமா இருக்கு.
இந்த காலத்து பிள்ளைகளுக்கு சுத்த தமிழ் எப்படி பேசறதுன்னு தெரிஞ்சுக்க இதுபோல புராதன சீரியல், பக்தி சீரியல் அவசியமாத்தான் இருக்கு.அது மட்டுமில்லாம ஒரு கதை போல சொல்லி, காட்சிகளை காண்பிப்பது என்பதும் குழந்தைகளுக்கு பிடிச்சதா இருக்கு.
ஆனா, ஒளிபரப்பும் நேரம் மாலை 6 மணி 30 நிமிடத்துக்கு எனும்போது பல பிள்ளைகள் பார்க்க வாய்ப்பில்லை.வீட்டில் பெரியவர்கள் மிஸ் பண்ணாம பார்க்கறாங்க.
அது மட்டுமில்லைங்க... வீட்டில் இருக்கற பெரியவங்க.. விநாயகரை நல்லா தேர்ந்தெடுத்து போட்டு இருக்காங்க... முருகன் எவ்ளோ அழகு.. அவளோ அழகா ஒரு பையனை எங்கே பிடிச்சு இருப்பாங்கன்னு சீரியலைப் பார்த்துகிட்டு வீட்டில் பெரியவங்க பேசினா,
இதை கேட்டுகிட்டு இருக்க வயசு பொண்ணுங்க சும்மாவா இருப்பாங்க. முருகனா நடிக்கறவன் அவ்ளோ அழகா.. என்ன நம்ம ஆளை விடவான்னு, பொண்ணுங்க விநாயகர் சீரியலைப் பார்க்க உட்கார்ந்துடறாங்க..
உடனே, ஏய்... விநாயகர் சீரியலைப் பாருடீ... முருகனா நடிக்கறவன் கொள்ளை அழகா இருகாண்டின்னு ஃபிரண்ட்ஸ் குரூப்ல சொல்ல வயசு பொண்ணுங்க இந்த சீரியலை பார்க்கறது அதிகமாயிருச்சுங்க.
பசங்களுக்கு சொல்லனும்னா பார்வதியா நடிக்கற பொண்ணு சூப்பரா இருக்கு. நம்பலேன்னா சீரியலைப் பாருங்க தெரியும்..