For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Sun tv Serials: சீரியல்களில் மட்டும் இப்படி சகுனம் காமிக்குதே!

Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து தொலைகாட்சி சீரியல்களிலும் ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது என்றால் சகுனம் காண்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டில் அதது அன்றைய பிழைப்புக்கு, அங்கே வேலை செய்ய ஓடலாமா,,இங்கே வேலை செய்ய ஓடலாமா என்கிற தீர்மானத்துக்குள் வருவதற்குள் பூனை குறுக்கே போகிறது என்கிற சகுனம்.

காலையில் வேகமா சமைச்சுக்கிட்டு வேலை பார்த்துகிட்டு இருப்பாங்க, அவசரமா தலையில வச்ச பூ விழுந்துடும். அல்லது முகம் பார்க்கும் கண்ணாடி கை தவறி விழுந்திரும். அன்னிக்கு முழுக்க சகுனத் தடை என்று அந்த பெண்னின் முகம் எப்போதும் பாவம் பார்ப்பது போலவே இருக்கும்.

சீரியல் கண்மணி

சீரியல் கண்மணி

கண்மணி சீரியலில் தர்மதுரை மனசு சரியில்லாமல் இருக்கிறார்.அதற்குள் சின்ன பொண்ணுக்கு கீழே விழுந்து காலில் அடிபட்டு விட்டது என்று குடும்பமே ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார்கள்.அப்போது கணவனை விட்டுவிட்டு விஜயலட்சுமியும் போறாங்க. அவங்க தலையில இருந்த பூ கீழே விழுந்துருது. விஜயலட்சுமி பூ கீழே விழுந்துருச்சு பாருன்னு சொல்லி எடுத்து கொடுக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஓரிரு மணி நேரங்களில் தர்மதுரை இறந்து விடுகிறார்.

 சீரியல் மின்னலே

சீரியல் மின்னலே

நேற்று மின்னலே சீரியலில் கணவனை கயவன் ஒருவன் கொல்ல போகிறான்.மனைவிக்கு மனது சரியில்லை. அவங்க பூஜை அறையில் உட்கார்ந்து இருக்காங்க. விளக்கு ஏத்தினால், விளக்கு பற்றவில்லை. ஒரு வழியாக பல தீக்குச்சியை செலவு செய்து விளக்கை ஏத்தியாச்சு.

மருமகள் ஷாலினி, அத்தை சாப்பிட வாங்க அத்தைன்னு கூப்பிட,எனக்கு மனசு சரியில்லை. சகுனமும் சரியில்லை ஷாலினி.இத்தனை தடவை விளக்கு ஏத்தியும் பத்திக்கலை. கற்பூரம் காண்பிச்சுட்டு வரேன்னு அவங்க சொல்லி, கற்பூரம் ஏத்தறாங்க. அது விளக்கு நடுங்கி இவங்க புடவையில் விழுந்து தீ பிடிச்சுருது.

சகுனத்துக்கு பயந்தது போலவே, கடைசியில் இவங்க புருஷனும் கொலை செய்யப்பட்டு செத்துடறார்.

நிலா சீரியல்

நிலா சீரியல்

நிலா சீரியலில் நிலாவின் வளர்ப்பு அப்பா என்று சொல்லப்படும், தாய் மாமன் ராஜசேகர் நீலாம்பரியிடம் கையும், களவுமாக தனது தங்கை கணவரின் போட்டோவை எடுத்து வந்தவர் மாட்டிக்கொள்கிறார். அவரை நீலாமபரி வில்லி மாதிரி மிரட்டிக்கொண்டு இருக்க, இங்கு கவுசல்யாவுக்கு தலையில் இருந்த பூ கீழே விழுகிறது.

 வாடிப்போச்சுக்கா பூ

வாடிப்போச்சுக்கா பூ

பூ வாடிப் போச்சுக்கா..இதையா மறுபடி வச்சுக்க போறேன்னு தம்பி கேட்கறான்.இல்லடா எப்படி இவ்வளவு சேர்க்கிறம் வாடுச்சுன்னு தெரியலைன்னு இவை சொல்ல, இரு பக்கத்துல இருக்கற முக்குல கடையில பூ வாங்கிட்டு வரேன்னு கிளம்பிடறான்.

வெள்ளைப் புடவை

வெள்ளைப் புடவை

இதுக்கு நடுவுல மகள் ஸ்வேதா, அம்மா உனக்கு ஒரு புடவை வாங்கிட்டு வந்து இருக்கேம்மா.நானும் உன் மாப்பிள்ளை சஞ்சயும் ஷாப்பிங் போனோம். உனக்கும் ஒரு புடவை எடுத்தோம்.. இந்தம்மான்னு குடுக்கறா. அதை பிரித்துப் பார்த்தால் வெள்ளைப் புடவை.இதையும் ஒரு சகுனத் தடையா நினைச்சு மனம் கலங்கி கண்ணீர் விடறாங்க கவுசல்யா..

இப்படி சகுனம் சகுனமென்று நன்றாக இருக்கும் மக்களையும் அதன் பின்னோக்கியே, தவிர மக்களை பின்னோக்கியும் கொண்டு செல்வது போல் இருக்கிறதே...இந்த நினைப்பு சரிதானா?

English summary
All television serials routinely show zeal if something is going to happen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X