Sundari Neeyum Sundaran Naanum Serial: வளையல் உடைஞ்சாச்சு.. படுக்கையில் புரண்டாச்சு!
சென்னை: ஒரு இளம் பெண்ணும் ஆணும் அடிக்கடி அருகருகில் இருக்கும் வாய்ப்பு. இருந்தாலும், இவர்களுக்குள் எப்போதும் சண்டை நடந்து வருகிறது. இவர்கள் காதலர்களா, நண்பர்களா?
இந்த சந்தேகம் விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலின் தமிழ்ச்செல்வி, வேலு இருவரின் நடவடிக்கை இருக்கிறது. எப்போதும் பாட்டி கூப்பிடறாங்க என்று தமிழ்ச்செல்வி வேலு வீட்டில்தான் இருக்கிறாள்.
இருவருக்குள்ளும் அவ்வப்போது நெகிழ்வான சம்பவங்களும் அரங்கேறி வந்தாலும், இப்போது இவர்களின் நெகிழ்வு நிகழ்வு எல்லையை மீறிவிட்டது.
இதுதான் காதலா?
வேலு அரசியல்வாதி... பாட்டிக்கு பேரன் வேலு என்றால் உயிர். அதே போல அரசு உதவியுடன் பள்ளி ஒன்றை நடத்தி வரும் தமிழ்ச்செல்வியை பார்த்ததில் இருந்து பாட்டிக்கு அவளை எப்படியாவது பேரன் வேலுவுக்கு கட்டி வைத்துவிட வேண்டும் என்று ஆசை. அவளுடன் நட்பாகி வீட்டுக்கு அடிக்கடி வரவழைக்கறாங்க.
தமிழ்ச்செல்வி வேலு
வேலுவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் எப்போதும் ஏடாகூடம்தான். பிரஸ்டீஜ் இஸ்யூதான். இவன்கிட்டே நாம எதுக்கு பேசணும், இவ கிட்டே நாம எதுக்கு தாழ்ந்து போகணும் என்பது போல. இருப்பினும் பாட்டி நம்பிக்கை விடவில்லை. இருவரையும் அடிக்கடி எதாவது வேலைக்கு என்று வெளியே அனுப்புகிறார்கள்.
எப்போதும் சண்டை
எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கும் வேலு தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து புரட்டாசி படையல் போட்டதில் இருவருக்குள்ளேயும் கொஞ்சம் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது போல தெரியுது. அவள் காயத்துக்கு இவன் மருந்து போட மயில் இறகுடன் வருகிறான் அதுவும் இரவு நேரத்தில்.
கட்டிலில் காலையில்
காலையில் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்து பார்க்க வேலு அசந்து ரொம்ப நேரம் தூங்கிக்கொண்டு இருக்கிறான்.பாட்டி அவனை எழுப்ப சொல்ல, வந்தவள் தட்டி எழுப்ப எழுப்ப சுகமா இருக்கு பாட்டி இன்னும் இப்படியே தட்டுன்னு கண்ணை மூடிக்கிட்டே சொல்றான் வேலு.
போர்வையை இழுத்தால்
இவன் சரி வர மாட்டான் என்று போர்வையை இழுக்க, அவன் தன் பக்கம் போர்வையை இழுத்து போர்த்திக்க நினைத்து இழுக்க போர்வையோடு பெண்ணும் சேர்ந்து அவன் மார்பில் கிடக்க எப்படி இருக்கும் அவனுக்கு? விழித்துப் பார்க்கிறான் தமிழ்ச்செல்வி. கை கட்டிலில் பட்டு வளையல்
இனிதான் காதலா?
இவன் இந்த பக்கம் போர்வையை இழுக்க அவள் அருகில் வருகிறாள். அவன் இந்த பக்கம் போர்வையை இழுக்க இவன் மார்பில் அவள் விழுகிறாள்.இப்படியே புரண்டு புரண்டு கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். போர்வையை ஒருத்தர் விட இன்னொருத்தர் விடுபட என்று. இது காதலா, இனிதான் காதலா?