Sundari Neeyum Sundaran Naanum Serial: ஆண்பிள்ளைக்கு புடவை கட்டினாலும் அழகுதான்...!
Recommended Video
சென்னை: புடவை என்றால் ஆண்களுக்கும் பிடிக்கும்.. ஆனால், அதை உடுத்திக் கொள்வது பெண்ணாக இருந்தால். ஆனால், இங்கே பாருங்களேன்... ஆண்பிள்ளைக்கு புடவை கட்டினாலும் அழகுதான்னு சொல்ற அளவுக்கு இருக்கு.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வேலு தமிழை சிரிக்க வைக்க புடவை கட்டிக்கிட்டு வர்றான்.இதுவும் அழகாத்தாங்க இருக்குது.
வேலுவுக்கும் தமிழுக்கும் கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில் தமிழ் வேலுவிடம் கோச்சுக்கறா. அந்த கோவத்தைத் தணிக்க பாவம் என்னதான் செய்வான் வேலு?
வேலு புடவையில்
ஜவுளிக் கடையில் தமிழ் உம்மென்று உட்கார்ந்து இருக்க வேலு, டிரஸிங் ரூமுக்குள் போயி, அழகிய புடவை ஒன்றை ரொம்ப அழகாக கட்டிக்கிட்டு வெளியில் வர்றான். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் இவனை பார்த்து சிரிக்க உம்மென்று உட்கார்ந்து இருந்த தமிழ் கூட வாய்விட்டு சிரித்து விடுகிறாள்.
என்ன வேணும்னாலும்
தமிழ் சிரிச்சுட்டு இன்னும் சிரிப்பை அடக்க முடியாதவளாக, நான் சிரிக்கணும்னா நீ என்ன வேணும்னாலும் செய்வியான்னு கேட்கிறாள். ஆமாம்.. நீ சிரிக்கலேன்னா நான் உள்ளுக்குள் அழுவேன் தமிழ்னு சொல்ல தமிழ் நெகிழ்ந்து போகிறாள்.
பரம ரகசியம்
பொதுவாகவே பெண்களுக்கு புருஷனின் சட்டை ஜீன்ஸை போட்டுப் பார்க்க ஆசை வருவது போல, ஆண்களுக்கும் உள்ளுக்குள் பொண்டாட்டியின் புடவையை ஒரு நாளைக்கு கட்டிக்கொண்டு அவள் முன் நிற்க வேண்டும் என்று ஆசை வரும். சிலர் இதை வெளிப்படுத்துவார்கள், சிலர் அதை மனதுக்குள் போட்டு புதைத்து விடுவார்கள்.
அப்படி ஒரு ஈர்ப்பு
பெண்களின் விதம் விதமான டிசைன் போட்ட புடவைக்கு ஆண்களையும் ஈர்க்கும் தன்மை உண்டு. சில பேர் மனைவியின் புடவையை ஆசையாகப் போர்த்திக் கொண்டு தூங்குவார்கள். சில பேர் பொண்டாட்டியின் புடவையை லுங்கி போல மடித்துக் கட்டிக் கொள்பவர்களும் உண்டு.
இது கதையல்ல நிஜம்!