Pandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிரின் கெமிஸ்ட்ரி இப்படி அள்ளுது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ரொமான்ஸெல்லாம் இல்லைங்க.
ஆனால், விரசம் இல்லாம ரசிக்கற மாதிரி எடுத்து இருக்காங்க... பாராட்டலாம்.
கருத்து வேறுபாடு
கதிராக நடிக்கும் குமரன், முல்லையாக நடிக்கும் சித்ரா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு என்று பேசிப் பேசி எழுதி எழுதி ஓய்ந்தார்கள். ஆனால், இருவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் என்னவோ பெருகிக் கொண்டுதான் இருந்தார்கள்.
Sundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே?
முதலுக்கே மோசம்
ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் அதிகமாவது போல தோன்ற, முதலுக்கே மோசம் வந்துவிடும் அபாயம் சீரியல் எடுப்பவர்களுக்கு. இருவரும் ராசியாகப் போனால்தான் உண்டு என்கிற நிலைமை. உடனே இருவரும் சமாதானம் ஆகி வெறும் கருத்து வேறுபாடுதான்.. சமாதானம் ஆகிவிட்டோம் என்று ஒன்றாகப் பேசி வீடியோ விட்டார்கள்.
இப்போது அள்ளுது
என்னதான் கருத்து வேறுபாடு இருந்த போதும் கூட நடிக்க வேண்டிய காட்சிகளில் இருவரும் குறை ஒன்றும் வைக்காமல்தான் நடித்து கொடுத்து வந்தார்கள். கதைப்படி இருவருக்குமான ரொமான்ஸ்தான் சீரியல் ஆர்வலர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வருகிறது.
கண்ணால் பேசுவதும்
காட்சிகளில் இருவரும் கண்ணால் பேசிக்கொள்வதும்... அவன் அதிராமல் முல்லை என்று கூப்பிட்டால், அவசரமாக ஓடோடி வந்து என்ன என்று ஆச்சரிய படுத்துவது போல கேட்பதும் பார்ப்பவர்களுக்கு குஷியாக இருக்கிறது.
தோளில் தூசி
முல்லை தோளில் படிந்து இருக்கும் தூசியை எடுக்க இவன் கையை அருகே கொண்டு போக, அவன் என்ன செய்யப் போகிறானோ என்று கண்களை மூடி சிலிர்க்க.. இவன் வெறும் தூசியை எடுக்கிறான். அவள் ஏதோ பேச வந்து டீ தரவா என்று கேட்டுவிட, எப்போதும் டீ மட்டும்தானா எனக்கு பிடிக்கும் என்று இவன் சலித்துக் கொள்கிறான்.