மாயன் கடை திறப்பு விழாவுல சூரிய வம்சம் சீன் பார்த்தாச்சுங்கோ...!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் காமெடியாவும் இருக்கு, டிராஜடியாவும் இருக்கு. இதில் இரு வேடத்தில் செந்தில் நல்லா நடிக்கறார்.
ரவுடி, பொறுக்கின்னு பேரெடுத்த மாயன் புதுசா ஹோட்டல் திறக்கறார். இவன்தான் உருப்படாம போயிட்டானேன்னு, அவங்க அப்பா குஸ்தி மாயனை வெறுக்கறார்.
அதே சமயம் ரெட்டை பிள்ளைல இன்னொரு பிள்ளையான டாக்டர் அரவிந்தை மதிக்கறார். மாயன் மேல பாசம் இருந்தாலும், அவன் எப்படியாவது உருப்படணும்னு வெறுப்பா இருக்கற மாதிரி நடிக்கறார்.
மாயன் கடைத் திறப்பு விழாவுக்கு எல்லாருக்கும் அழைப்பு விடுக்கறான். அப்பா அம்மா உட்பட. ஆனா, இவன் தேவியை கல்யாணம் செய்துகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா போயிருக்கான்.
பிள்ளை கடை திறக்கறான்னு தெரிஞ்சதும், அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனா, ஒருத்தொருக்கு ஒருத்தர் சொல்லாமலே, யாருக்கும் தெரியாமலே வந்து கடையைப் பார்த்துட்டு சாப்பிட போறப்போ எல்லாரும் மாட்டிக்கறாங்க.
அப்பா குஸ்தி வரலைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான் மாயன். பார்த்தா அவரும் தலையில் துண்டை போட்டுக்கிட்டு, காபி சாப்பிட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கார். இருந்தாலும் மாயனிடம் வெறுப்பா பேசற மாதிரி நடிச்சுட்டு, 2 ஆயிரம் ரூபாய் பணமும் குடுக்கறார்.
மாயன் கண் கலங்குவதும், இதுதான் எனக்கு பெரிய சொத்துன்னு, அப்பா தந்த 2 ஆயிரம் ரூபாயை வச்சுக்கிட்டு மாயன் அழுவதும் கண்ணில் நீரை வரவழைப்பதா இருந்துச்சு.
ஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை?
சூரிய வம்சம் சீனை கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்காங்க.. போகட்டும் விடுங்க..!