தமிழ்ப் பசங்கதான் கெத்து... அவன்தான் எனக்கு வேணும் மாப்பு..சீனியர் சுட்டீஸ் கலகல.!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் தினமும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலின் நடிகைகள் வந்திருந்தாங்க.
இமான் அண்ணாச்சிதான் வழக்கமா எல்லாரையும் கலாய்ச்சு சிரிக்க வைப்பார். இதுல வந்திருந்த சந்திரா,லேகா,அஞ்சலி அண்ணாச்சியை ரொம்ப கலாய்ச்சு அவரை குலுங்ககுலுங்க சிரிக்க வச்சுட்டாங்க.
சந்திராவா நடிக்கும், ஸ்வேதா மராட்டி பொண்ணாம். எம்பிஏ படிச்சி இருக்கும் இவருக்கு இவரை மாதிரி படிச்ச மாப்பிள்ளை வேணுமாம்.
ஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி
கெத்து
ஸ்வேதாவுக்கு தமிழ் பையன்தான் மாப்பிள்ளையா வேணுமாம். மராட்டி பசங்க மொழு மொழுன்னு இருப்பாங்க..ஆனா,தமிழ்ப் பசங்க மீசை,தாடி வச்சுக்கிட்டு கெத்தா இருப்பாங்க. பொண்ணுங்களை மதிப்பாங்க..நல்லா பார்த்துப்பாங்கன்னு சொன்னார்.
செம அழகு
லேகாவா நடிக்கற பொண்ணு சந்திர லேகா சீரியல் ஆரம்பிச்சு 5 வருஷத்துக்கு மேல ஆகப்போகுது. இன்னும் சீரியல் தவிர வேற நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது இல்லை. சீரியலில் ரொம்ப அழகா இருப்பார்.
நீ இல்லேன்னா
லேகாவிடம் அண்ணாச்சி .காதலிச்ச பையன் நல்லவன் இல்லேன்னு தெரிஞ்சா என்னமா பண்ணுவேன்னு கேட்டப்போ,போடா போ..நீ இல்லேன்னா இன்னொருத்தன்னு சொல்லிருவேன்னு சொல்லி அதிர சிரிக்க வச்சார். கல்யாணம் ஆயிருச்சுனான்னு கேட்டப்போ ...டைவர்ஸ் பண்ணிருவேன்.. சரி,குழந்தை பிறந்ததும் தெரிஞ்சுதுன்னா என்றால் , குழந்தையை வளர்த்துக்கிட்டு அவனை டைவர்ஸ் பண்ணிட்டு ஜாலியா இருப்பேன்னு சொன்னார்.
மருமகள்
மாமியார் மருமகள் சண்டை வரத்துக்கு காரணம் என்னமான்னு கேட்ட போது , சந்திரலேகாவில் போலீஸ் பொண்டாட்டியா நடிச்சு இருக்கும் அஞ்சலி, மாமியார் பெரியவங்க..அனுபவம் அதிகமிருக்கும்.சோ,அவங்க எது சொன்னாலும் நம்மை நன்மைக்குன்னு பேசாம இருந்தா சண்டை வராதுன்னு சொன்னார். பசங்களும் பெத்தவங்களை பார்த்துக்கற மாதிரி பொண்டாட்டியை பார்த்துக்கணும்னு சொன்னார்.
நகரத்து பொண்ணு
கிராமத்து பொண்ணு, நகரத்து பொண்ணு என்ன வித்தியாசம்மான்னு கேட்டார். கிராமத்து பொண்ணுங்க பெத்தவங்களை எதிர்த்து பேச மாட்டாங்க. சோம்பேறியா இருக்க மாட்டாங்க. நகரத்து பொண்ணுங்க பெத்தவங்க பேச்சை கேட்கமாட்டாங்க. ஆனா,அவங்க பேச்சை மீறி அந்த காரியத்தை செய்துட்டு, அங்க ஒரு பாடு பட்டுட்டு வருவோம் பாருங்க..அப்போ தெரியும் பெத்தவங்களோட அருமைன்னு சொன்னார்.
சோஷியல் மீடியா
சோஷியல் மீடியாவை ஜஸ்ட் பார்த்துட்டு விட்டுடனும். அதுலேயே மூழ்கிக் கிடந்தா நம்ம சந்தோஷம் எல்லாத்தையும் இழந்துருவோம்னு மிக அழகாக சொன்னார் அஞ்சலி.
சும்மா சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சி ஜாலிக்காக நடத்துறாங்கன்னு நினைக்கறோம். அதுலேயும் இந்த புள்ளைங்க கருத்து சொல்லுதுங்க...நிகழ்ச்சி நல்லாருக்கு.