Tamilselvi Serial: அக்கினி குண்டத்தில் அடிபிரதட்சணம்...மூட நம்பிக்கையின் உச்சம்ய்யா!
சென்னை: வர வர தொலைக்காட்சி சீரியல்கள் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையின் உச்சத்தை மக்களுக்கு போதிப்பதாய் இருக்கின்றன.
சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் தமிழ்ச்செல்வி குழந்தை உண்டானால், அவள் புருஷன் அமுதனுக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடர் சொல்றார்.
இதற்கு பரிகாரம் என்று அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செய்ய சொல்கிறார்கள்.
அடிப் பிரதட்சணம்
அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செய்த தமிழ்ச்செல்வி அக்கினியில் விழுந்து ஒரு பக்கமே கருகிப் போன நிலையில் இருக்கிறாள். அதற்கு ட்ரீட்மென்ட் முழுவதுமாக போகாத நிலையில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முன்பு இருந்த முகத்தை அப்படியே கொண்டு வந்து விடலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
Barathi Kannamma Serial: போகி நெருப்புல மருமக போட்டோ... நல்லாத்தான்யா கதை எழுதறாய்ங்க!
கருகிய தோலில்
கருகிய தோலில் அப்படியே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விடுவீர்களா? முதலில் அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செயதது தவறு என்று எப்போது சொல்வீர்கள்? அதற்குள் பிளாஸ்டிக் சர்ஜரியில் பழைய முகத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை தருவீர்களா?
கோயில் பிரார்த்தனை
கோயில் பிரார்த்தனை என்று எல்லா சீரியல்களிலும் இளம் பெண்களை புருஷனுக்காக என்று துன்புறுத்துவது அதிகமாக இருக்கிறது. நாயகி சீரியலில் ஆனந்தி கடுமையான பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறாள் இதை கெடுக்க அனன்யா திட்டம் போடுவது இப்படி கதை நகர்வது வாடிக்கையாகி விட்டது.
கொடுமையிலும் கொடுமை
ஏற்கனவே தீயில் கருகிக் கிடக்கும் தமிழ்ச்செல்வியை இன்னும் சாகடிக்கத் துடிக்கிறாள் தில்ரூபா. இதெல்லாம் கொடிய மனிதர் கூட நினைக்கத் துணியாத செயல். இப்படி எல்லாம் கதை என்றாலும் கூட மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு எழுதுகிறார்கள். எல்லாமே கொடுமையிலும் கொடுமையாகத்தான் இருக்கிறது.