Tamil Selvi Serial: கஷ்டம் குடுக்கறதுன்னா வில்லிகள் விதவிதமா செய்யறாங்க!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில், சொல்ல வந்த கருத்துக்களை மறந்து திசை மாறி பயணிக்கிறார்களோ என்கிற எண்ணம் வருகிறது.
இல்லை சீரியலை மற்றவர்கள் போல ஜவ்வு மாதிரி இழுத்து, வன்மம், குரோதம் எல்லாம் காண்பிச்சு கதையை சொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.
ஆனால், நமக்கு பார்ப்பதையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுத்து. எரிச்சல் வருது. நல்ல நோக்கத்தை வரவேற்க முடியாதபடி கதையின் போக்கு இருக்கிறது.
விரதம் வேண்டுதல்
தமிழ்ச்செல்விக்கும், அமுதனுக்கும் முதலிரவு நடக்க, குல தெய்வம் கோயிலுக்கு போயி, வீட்டுக்கு வந்த மருமகள் கடுமையான விரதம் இருக்கணுமாம். புதுப் பொண்ணு என்னென்ன கனவுகளோடு வந்திருப்பாள், இப்படியாங்க அவங்களை வறுத்து எடுப்பீங்க?
Aranmanai Kili Serial: எனக்கு போக நேரம் வந்துருச்சும்மா... ஐயோ பாவம் ஜானு!
தண்ணி குடிச்சாலும்
விரதம் மேற்கொண்டால் சாப்பிட்டால்தான் குத்தம்.. தண்ணீர் குடித்தால் கூடவா? இப்படிப்பட்ட சாமி எங்கே இருக்குது...கண்டிப்பா மக்கள் எல்லாரும் பார்க்கட்டும் கொஞ்சம் சொல்லி விடுங்கள்.இப்படி விரதம் இருந்து பெண்கள் சுபிட்சமாக முதலிரவு நடந்து குழந்தை குட்டிகள் பெற்று சந்தோஷமாக வாழட்டும்!
வேண்டுதல் நேர்த்தி கடன்
கல்லு உப்பு கால் மூட்டை அளவுக்கு இருக்குங்க. அதில் முட்டி போட்டு தமிழ்ச்செல்வி நிக்கணுமாம். பூஜை செய்து குடம் குடமா தண்ணீர் விட்டு, தமிழ்ச்செல்வி தலையில் ஊத்தணும். அப்போது கல் உப்பு கரைந்தவுடன் எழுந்துக்கலாம். இது ஒரு வகை வேண்டுதல் நிவர்த்தி.
வில்லி வேலை
வில்லி புத்தி இந்த இடத்துல எப்படி வேலை செய்யுது பாருங்க.மூத்த மருமகள்தான் வில்லி. இவங்க வில்லியானதுக்கு காரணம் என்ன தெரியுமா, அமுதனுக்கு தனது தங்கையை கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருந்தாங்க. அது நடக்கலை. இப்போ தமிழ்ச்செல்வியை துரத்திட்டு, தங்கையை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க.
கண்ணாடி பாட்டிலை உடைச்சு தூள் தூளாக்கி கல்லு உப்பில் கலந்துடறாங்க. அது மேல தமிழ்ச்செல்வி முட்டி போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்க, பூஜை செய்த தண்ணீரை தமிழ்ச் செல்வியின் தலையில் ஊத்தறாங்க.
காண கன கொடூரம்!