Tamilselvi Serial: அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் முதலிரவு நடக்க கூடாதாம்!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில், கல்யாணம் நடந்த பிறகு அனைத்து சீரியல்களிலும் நடக்கும் பாலிடிக்ஸ் இங்கேயும் நடக்கிறது. ஆனால்,இதில் உண்மை இருப்பதாக சொல்கிறார்கள்.
தமிழ்ச்செல்விக்கும் அமுதனுக்கும் முதலிரவு நடந்து, அவங்களுக்கு குழந்தை பிறந்தால் பிறக்கும் குழந்தையால் அமுதனின் உயிருக்கு பெரும் ஆபத்தாம்..
ஜோதிடரிடம் அமுதனின் அம்மாவும், அப்பாவும் ஜோதிடம் பார்த்துட்டு வருவதற்குள், இங்கே பாட்டி அமுதன், தமிழ்ச்செல்வி சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்துடறாங்க.
பிடிக்காத சாந்தி முகூர்த்தம்
அமுதன் தமிழ்ச்செல்வி இரண்டு பேருக்குமே இதில் உடன்பாடு இல்லை என்றாலும், பாட்டிக்காக ஒன்றும் பேசாமல் இருக்கிறார்கள். அறையில் இருவரும் தனித்தனியாக படுத்து கொண்டு இருக்க , திடீரென்று கதவைத் தட்டும் சத்தம்.
Roja serial: சும்மா இருந்தா எப்படி சார் புடவையை சரி பண்ணி விடுங்க!
அம்மா அப்பா
கீழே விரித்து இருந்த பெட்ஷீட்டை எடுத்துட்டு, கதவைத் திறந்தால் அப்பாவும், அம்மாவும் நிற்கிறார்கள். என்னம்மான்னு அமுதன் கேட்க, இவுங்க சாந்தி முகூர்த்தம் விஷயமாத்தான் நாங்க ஜோதிடரைப் பார்க்க போயிருந்தோம்.அவர்கிட்டே நாள் குறிச்சு தர சொல்லி இருந்தோம்.
குல தெய்வம் கோயிலுக்கு
அவர் முதலில் குல தெய்வம் கோயிலுக்கு போயி பூஜை பண்ணிட்டு வர சொல்லி இருக்கார் அமுதா. அதை முடிச்சுட்டு சாந்தி முகூர்த்தம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க. நானும் இப்போ வேணாம்னுதான் அம்மா சொன்னேன். பாட்டிதான் எதுவும் கேட்காமலே ஏற்படு செய்துட்டாங்கன்னு சொல்றான்.
சிறுசுங்க எத்தனை
எத்தனை நாளைக்கு சிறுசுங்களை சாந்தி முகூர்த்தம் செய்யாமலே வச்சிருக்க முடியும். அதனாலதான் ஏற்பாடு செய்தேன்.உங்களுக்கு சாதகமான ஜோதிடரை பார்த்து இருப்பீங்க. உங்களுக்கு சாதகமான பதிலை அவர் கொடுத்து இருப்பார் நடத்துங்க நடத்துங்கன்னு சொல்லிட்டு போயிடறாங்க பாட்டி.
அமுதன் அம்மா அப்பா திட்டமே எப்போதும் அமுதனுக்கும், தமிழ்ச் செல்விக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கக் கூடாதுன்னுதான் என்கிற எண்ணம் யாருக்கும் தெரியாது.