பேய் இருக்குதா இல்லையா.. பொட்டுன்னு ஒரு கேள்வி.. பொளேர் விவாதம்.. தமிழா தமிழா!
சென்னை: பேய், பூதம், பில்லி சூனியம், ஏவல் என்று பல விஷயங்கள் மீதான நம்பிக்கை மனிதர்களை ஆட்டுவிக்குது. இதை மூட நம்பிக்கை என்று பலரும் சொன்னாலும் அதை மட்டுமே யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
இதை சாதாரணமானவர்கள் உரத்த குரலில் சொல்லிவிட முடியாது. அதை இந்த சமுதாயம் ஏத்துக்காது. ஆனால், விவேக் போன்ற பிரபலங்கள் காமெடியாக சந்தடி சாக்கில் இதை காட்சியாகவும் வைத்து இருக்கிறார்கள்.
பேய் இருக்குதா இல்லையான்னு நடிகர் வடிவேலு சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாரிடம் பொட்டில் அடிச்சாப் போல ஒரே வரியில் கேட்டு இருப்பார். இருந்தாலும், அந்த கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது?
தமிழா தமிழா
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா டிபேட் நிகழ்ச்சியை இயக்குநர் கரு.பழனியப்பன் நடத்தி வருகிறாரா. வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்திற்கு ஒரு சுவாரஸ்ய விஷயம் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
Oru Oorula Oru Rajakumari Serial: இன்னுமா இப்படி எல்லாம் நடக்குது? என்னத்த!
திகில் பயம்
ஜாலியான விஷயங்கள், சுவாரஸ்யமான விஷயங்களென்று இருந்தாலும், ஆரம்பமே படு அமர்க்களம் என்று இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியிட்டு வருகிறது ஜீ தமிழ் டிவி. அதாவது இந்த வாரம் பில்லி சூனியத்தில் கை தேர்ந்தவர்கள் சோதனைக்கு தயார்.. என்றும் ஒரு திகிலான அனுபத்திற்கு தயார் ஆகுங்கள் என்று நம்மையும் தயாராக சொல்லி ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
ஞாயிறு இரவு
பில்லி சூனியயத்தால் என்னவெல்லாம் பண்ண முடியும். நீங்க என்னவெல்லாம் பண்ணி இருக்கீங்க என்கிற கரு.பழனியப்பன் கேள்விக்கு ஆளையே காலி பண்ணலாம் என்று ஒருத்தர் அதிரடியா பதில் சொல்லி பார்ப்பவர்களை திகிலாக்கி இருக்காருங்க. இன்னொருத்தர் சொல்றார் எத்தனை லட்சம் வேணும்னாலும் நான் கட்டறேன்..என்மேலே ஏவல் விட சொல்லுங்க என்று சவாலாக.
பார்க்கலாம் வீடியோ
வீடியோவை பார்த்துட்டு வந்துடலாம்னு கரு.பழனியப்பன் சொல்ல, வீடியோவில் ஒருத்தர் சொல்றார்.. காலடி மண்ணை மட்டும் எடுத்துட்டு வாங்க.பில்லி சூனியம் வைப்பதில் 7 நாட்களில் கை கால் சரி இல்லாமல் போகலாம் , புத்தி பேதலிச்சு போகலாம்..ஆளே கூட இல்லாமல் போகலாம் என்று கூறும் வீடியோ அது.
7 நாட்களுக்குப் பிறகு என்ன நடந்தது? ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு பாருங்கள்.