ரெட்டை மாமியார் படுத்தும் பாடு... விழிக்கும் தாமரை!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன், அரவிந்த்னு ரெட்டை புள்ளைங்க
வெவ்வேறு தாய் வளர்க்கறாங்க. சொந்த தாய் வளர்த்த புள்ளை ரவுடியா இருக்கான். வளர்த்த தாயின் வளர்ப்பு பிள்ளை பெரிய டாக்டராயிடறான்.
பெத்த அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போக, வளர்த்தவங்களோட, பெத்தவங்க வீட்டுல வந்து தங்கறான் அரவிந்த். அங்கேயும் வந்து என் புள்ளையாத்தான் நீ இருக்கணும்னு சத்தியம் வாங்கிட்டுத்தான் வளர்ப்பு அம்மா பெத்த அம்மா வீட்டுக்கு வர்றாங்க.
திடீர்னு ஒரு மாமியார் காபி கேட்பதும், இன்னொரு மாமியார் கஞ்சி கேட்பதும்னு ஒரே அலப்பறை.. இதுல நடுவுல மாட்டிகிட்டு முழிக்கறது ரெட்டை மாமியாருக்கு ஒத்தை மருமக தாமரைதான்.
மகன் நல்லாருக்கணும்னு குலதெய்வம் கோயிலுக்கு வேண்டிக்கிட்டு விரதம் இருக்கணும்னு பெத்த தாய் சொல்றாங்க.யாரும் ஆதிக்கறதா இல்லை.
ஒன்னு.. 50 சதவிகிதம் ஓகே.. இன்னொன்னு...75.. அப்ப இன்னொன்னு...!
தாமரையும், அரவிந்தும் தனியா பேசிக்கறாங்க. எனக்காகத்தான் அம்மா விரதம் இருக்கணும்னு சொல்றாங்க. ஆனா, நான் விரதம் இருந்தா வளர்த்த அம்மா கோச்சுப்பாங்க.. நான் என்ன பண்றது தாமரைன்னு சொல்றான்.
நான் ஒரு ஐடியா .சொல்றேங்க.. எப்பவுமே என்னை அவங்களுக்குத்தான் செய்யறே.... எனக்கு எதுவும் செய்ய மாட்டேங்கறேன்னு அத்தை திட்டிகிட்டே இருக்காங்க. இப்பவும் நானே விரதம் இருந்துடறேன். எப்பவும் போல அத்தை திட்ட போறாங்க.. பார்த்துக்கலாம்னு சொல்றா..
நல்ல ஐடியா சொன்ன தாமரை.. 30 வருஷமா வளர்த்த அம்மாவை நான் பகைச்சுக்க முடியாது. அப்பா நான் தப்பிச்சேன்னு சொல்லிட்டு போறான்.இங்க தாமரை காபி வேணாம் அத்தை, தான் விரதம்னு சொல்ல எரிச்சலக்கறாங்க வளர்த்த மாமியார். குளிர்ச்சியாகறாங்க பெத்த மாமியார்.