உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா என்ன நடக்கும்?!
Recommended Video
சென்னை: சென்னை பாஷையில் இடைச் செருகலாக கோட் வேர்டு பேசினா அவங்கதான் புள்ளீங்கோ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த அரிய கண்டுபிடிப்பை ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கண்டுபிடித்து உள்ளார்கள்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா அவங்களை என்ன சொல்வீங்கன்னு கேட்டார்.
இளம்பெண் ஒருவர்
இதற்கு பதில் சொல்லிய ஒரு இளம் பெண்.எங்க வீட்டில் என் அப்பாவோட எங்கியாவது வெளியில போனா போலீஸ் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க சார். என் தம்பி இப்படித்தான் ஒரு மாதிரி சைடு சைடு எல்லாம் முடி வெட்டி இருப்பான்.அவன் கூட போனா நிச்சயமா போலீஸ் நிக்க வைப்பாங்க சார்னு சொன்னார்.
Sundari Neeyum Sundaram Naanum Serial: நான் சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்...!
முடிகொண்ட வாலிபன்
தலை நிறைய முடி வளர்த்து இருந்த வாலிபன் ஒருவன் இதற்கு பதில் அளிக்கையில், அது ஒன்னும் இல்லை சார்... போலீஸ்காரங்களுக்கு முடியே இருக்காது.அது என்ன விஷயம்னு என்கிட்டே கேட்கத்தான் வண்டியை நிறுத்த சொல்றதுன்னு கலாய்ச்சார்.
பேசினா அடித்தான்
எங்க வீட்டில் வூட்டாண்ட..அது இதுன்னு பேசினா ,வீட்டிலிருக்கும் ஒவ்வொருத்தரும் அடிச்சு வெளுத்துருவாங்க சார்னு ஒரு இளம்பெண் சொல்ல, உங்க ஊரில் ஏலே .. போலன்னு பேசுவீங்க..நாங்க அதை பேச முடியுமா? எங்க ஊர் பாஷயைத்தான் நாங்க பேசமுடியும். என்று சொல்லி அரங்கம் அதிர சிரிக்க வைத்தார்.
நிகழ்ச்சி சிரிப்புடன்
இப்படி தமிழா தமிழா நிகழ்ச்சி ரொம்ப சுவையாகவும், சூடாகவும் ரசிக்கும்படி இருக்கிறது. இந்த வாரம் ஞாயிறு அன்று குடும்பத்தோடு உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இது போல புள்ளீங்கோ இருந்தால் குடும்பத்துக்கு உதவியாக கூட இருக்கும்.